பதிவு செய்த நாள்
05 ஆக2017
06:52
புதுடில்லி : ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தின் தலைவர் நவீன் குமார் கூறியதாவது: சுயமதிப்பீட்டின் அடிப்படையில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்ய, செப்., வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலையில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் சேவை தொடர்பான, ஜி.எஸ்.டி., இடைக்கால கணக்கு தாக்கல், இன்று துவங்குகிறது.
ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், ‘ஜி.எஸ்.டி.ஆர்., 3பி’ படிவம் மூலம், ஆக., 20 வரை கணக்கு தாக்கல் செய்யலாம். வரி தொகையை செலுத்த, பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுடன், நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.ஜூலை மாதத்திற்கான இறுதி, ஜி.எஸ்.டி., கணக்கை, செப்., 5ல் தாக்கல் செய்ய வேண்டும். ஆகஸ்ட் விற்பனை தொடர்பான, ஜி.எஸ்.டி., கணக்கை, செப்., 20ல் தாக்கல் செய்யலாம்.
இதுவரை, பழைய வரி முறையில் இருந்து, 71.30 லட்சம் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் பதிவு செய்து, புதிய, ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு மாறி விட்டன. மேலும், புதிதாக, 13 லட்சம் பேர், ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|