பதிவு செய்த நாள்
05 ஆக2017
06:54
புதுடில்லி : இந்திய நிறுவனங்கள், ‘டிஜிட்டல்’ தொழிற்நுட்பத்தை பின்பற்றி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கு, முன்னுரிமை அளிக்க துவங்கி உள்ளதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
‘அடோப்’ நிறுவனம், ஆசிய பசிபிக் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் பணியாற்றும், 5,000 வடிவமைப்பாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தும் வல்லுனர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவில், பல நிறுவனங்கள் மின்னணு தொழிற்நுட்பத்திற்கு மாறவும், சேவை வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கும், முன்னுரிமை அளிக்க துவங்கி உள்ளன.
பல நிறுவனங்கள், வாடிக்கையாளருக்கு சிறந்த சேவை வழங்குவதை, முக்கிய இலக்காக கொண்டுள்ளன. இதற்காக, சமூக வலைதளங்கள் மற்றும் கருத்துருவாக்கப் பணிகளுக்கு, அதிகளவில் முதலீடு செய்கின்றன. ஆய்வில் பங்கேற்றோரில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், செயற்கை நுண்ணறிவு சாப்ட்வேர் போன்ற புதிய தொழிற்நுட்ப வரவால், பாதிப்பு ஏதும் இருக்காது என, தெரிவித்து உள்ளனர். எனினும், 30 சதவீதம் பேர், பாதிப்பு ஏற்படக் கூடும் என, கூறியுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை, 27 சதவீதம் பேர், புதிய தொழிற்நுட்பங்களின் அறிமுகம் குறித்து கவலை தெரிவித்து உள்ளனர். மிகச் சிறந்த வடிவமைப்பு மற்றும் புதிய கருத்துருவாக்கத்தை, ஆழமான புரிதலுடன் செயல்படுத்தும் நிறுவனங்கள், வாடிக்கையாளருக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும். இத்தகைய நிறுவனங்கள், போட்டியை சமாளித்து முன்னேறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|