ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம் ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
காலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2017
01:59

புது­டில்லி:‘‘வரும், 2020ல், சீனாவை மிஞ்­சும் வகை­யில், கால­ணி­களை தயா­ரிக்­கும் ஆற்­றல், நம் நாட்­டிற்கு உள்­ளது,’’ என, மத்­திய நிதித் துறை இணை­அமைச்­சர் சந்­தோஷ் கங்­வார் நம்­பிக்கை தெரி­வித்து உள்­ளார்.
டில்­லி­யில், சர்­வ­தேச காலணி கண்­காட்­சியை துவக்கி வைத்து, அவர் பேசி­ய­தா­வது:உல­க­ள­வில், காலணி தயா­ரிப்­பில், சீனா முத­லி­டத்­தில் உள்­ளது. அடுத்த இடத்­தில்,இந்­தியா உள்­ளது. உள்­நாட்­டில், 95 சத­வீத கால­ணி­கள்தயா­ரிக்­கப்­ப­டு­கின்றன. அதே சம­யம், நாட்­டின் தோல் பொருட்­கள் ஏற்­று­ம­தி­யில், கால­ணி­யின் பங்கு, 45 சத­வீத அள­விற்கே உள்­ளது; இதை உயர்த்த வேண்­டும். இதற்கு, தர­மான கால­ணி­கள் தயா­ரிப்­பில், நிறு­வ­னங்­கள் அதிக அக்­கறை செலுத்த வேண்­டும். ஜூலை, 1ல் அம­லுக்கு வந்த, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி­யில், 500 ரூபாய்க்கு குறை­வான கால­ணி­க­ளுக்கு, 5 சத­வீ­தம்; அதற்கு மேற்­பட்ட தொகைக்கு, 18 சத­வீ­தம் என, இரு வகை வரி விதிக்­கப்­பட்டு உள்­ளது.இத­னால், காலணி தயா­ரிப்புபாதிக்­கப்­படும் என, இத்­துறைசார்ந்­த­வர்­கள் தெரி­வித்து உள்­ள­னர்.
கால­ணி­க­ளுக்கு விதித்­துள்ள இரட்டை வரியை, மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும் என, கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.இது குறித்து, பரி­சீ­லிக்­கப்­படும். காலணி தயா­ரிப்­புத் துறையை ஊக்­கு­விக்க, அரசு முழு ஆத­ரவை வழங்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.இந்­நி­கழ்ச்­சி­யில், இந்­தியவர்த்­தக மேம்­பாட்டு கூட்­ட­மைப்­பின் தலை­வர், எல்.சி.கோயல் கூறு­கை­யில், ‘‘டில்லி, பிர­கதி மைதா­னத்­தில்,உல­கத்­த­ரத்­தில், மிக பிர­மாண்ட கண்­காட்சி மற்­றும் கருத்­த­ரங்­கக் கூடம் அமைய உள்­ளது. இத்­திட்­டத்­திற்கு, அனைத்து அமைப்­பு­களின் அனு­மதி கிடைத்­துள்­ளது,’’ என்­றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)