பதிவு செய்த நாள்
06 ஆக2017
01:59
புதுடில்லி:‘‘வரும், 2020ல், சீனாவை மிஞ்சும் வகையில், காலணிகளை தயாரிக்கும் ஆற்றல், நம் நாட்டிற்கு உள்ளது,’’ என, மத்திய நிதித் துறை இணைஅமைச்சர் சந்தோஷ் கங்வார் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
டில்லியில், சர்வதேச காலணி கண்காட்சியை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:உலகளவில், காலணி தயாரிப்பில், சீனா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில்,இந்தியா உள்ளது. உள்நாட்டில், 95 சதவீத காலணிகள்தயாரிக்கப்படுகின்றன. அதே சமயம், நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில், காலணியின் பங்கு, 45 சதவீத அளவிற்கே உள்ளது; இதை உயர்த்த வேண்டும். இதற்கு, தரமான காலணிகள் தயாரிப்பில், நிறுவனங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஜூலை, 1ல் அமலுக்கு வந்த, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியில், 500 ரூபாய்க்கு குறைவான காலணிகளுக்கு, 5 சதவீதம்; அதற்கு மேற்பட்ட தொகைக்கு, 18 சதவீதம் என, இரு வகை வரி விதிக்கப்பட்டு உள்ளது.இதனால், காலணி தயாரிப்புபாதிக்கப்படும் என, இத்துறைசார்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.
காலணிகளுக்கு விதித்துள்ள இரட்டை வரியை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, பரிசீலிக்கப்படும். காலணி தயாரிப்புத் துறையை ஊக்குவிக்க, அரசு முழு ஆதரவை வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், இந்தியவர்த்தக மேம்பாட்டு கூட்டமைப்பின் தலைவர், எல்.சி.கோயல் கூறுகையில், ‘‘டில்லி, பிரகதி மைதானத்தில்,உலகத்தரத்தில், மிக பிரமாண்ட கண்காட்சி மற்றும் கருத்தரங்கக் கூடம் அமைய உள்ளது. இத்திட்டத்திற்கு, அனைத்து அமைப்புகளின் அனுமதி கிடைத்துள்ளது,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|