பதிவு செய்த நாள்
06 ஆக2017
02:00
புதுடில்லி:மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த, மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், சரக்கு போக்குவரத்து, கிடங்கு சேவை உட்பட, பல்வேறு வர்த்தகங்களை மேற்கொண்டு வருகிறது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம் விண்ணப்பித்து இருந்தது. இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த, ‘செபி’ மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 700 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல் மற்றும் ஆக்சிஸ் கேப்பிட்டல் நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன.இதையடுத்து, விரைவில் பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|