காலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியாகாலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
08:15

இந்­திய பங்கு சந்­தை­களில், வர­லாற்று உச்­சத்­தில் வியா­பா­ரம் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கிறது. தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்டி, இந்த ஆண்டு தொடக்­கத்­தில், ஜன­வரி மாதம், 8,207 புள்­ளி­களில் ஆரம்­பித்து, தற்­போது, 10 ஆயிரத்து, 137 புள்­ளி­களை அடைந்­துள்­ளது. கடந்த, ஏழு மாதங்­களில், மே மாதம் கண்ட சிறிய இறக்­கம் தவிர, பிற மாதங்­களில் ஏற்­றம் கண்டு, வியா­பா­ரம் நடை­பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த வாரம் சந்­தை­யின் போக்கு, வர­வி­ருக்­கும் மீத­முள்ள நிறு­வ­னங்­களின் முதல் காலாண்டு நிதி நிலை அறிக்கை, சர்­வ­தேச சந்­தை­யின் நிகழ்­வு­கள் ஆகி­ய­வற்­றைப் பொறுத்து அமை­யும். இது­வரை, நிப்டி இண்­டெக்­ஸில் உள்ள, 50 நிறு­வ­னங்­களில், 30 நிறு­வ­னத்­தின் முதல் காலாண்டு அறிக்­கை­கள் வெளி­வந்­துள்ளன. அதில், ஒன்பது நிறு­வ­னங்­களின் அறிக்­கை­கள் சாத­க­மாக இல்லை. இந்த வாரம், எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் பரோடா, டாடா மோட்­டார், டாடா ஸ்டீல், ஐ.பி.சி.எல்., போன்ற முன்­னணி நிறு­வ­னங்­கள் சில­வற்­றின் அறிக்­கை­களும் வர உள்ளன
டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, இந்த ஆண்டு, 6 சத­வீ­தம் அதி­க­ரித்து, இரண்டு ஆண்­டு­கள் உச்­சத்­தில் உள்­ளது. இதற்கு உள்­நாட்டு பொரு­ளா­தார உயர்வு மற்­றும் அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இண்­டெக்ஸ் வீழ்ச்­சி­ய­டைந்­தது ஆகி­யவை முக்­கிய கார­ணங்­க­ளா­கும். இதன் விளை­வாக, ஏற்­று­ம­தியை நம்பி இருக்­கும் தொழில்­நுட்ப துறை, மருத்­துவ துறை சார்ந்த பங்­கு­கள் பாதிப்­புக்­கு உள்­ளா­கக்­கூ­டும்.
கடந்த வாரம், வங்கி துறை பங்­கு­கள் விலை சிறிது குறைந்து காணப்­பட்­டது. இருப்­பி­னும், கடந்த, மூன்று மாத சந்தை ஏற்­றத்­தில், வங்­கி பங்­கு­கள் முதன்­மை­யாக ஏற்­றம் கண்­டன.கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வட்டி விகி­தத்தை குறைத்­தது. இருப்­பி­னும், இனி வர இருக்­கும் காலத்­தில், வட்டி விகி­தம் மேலும் குறைய வாய்ப்­பு­கள் குறைவு. கடந்த சில ஆண்­டு­க­ளாக, செப்­டம்­பர் முதல் நவம்­பர் வரை பண­வீக்­கம் உயர்ந்து காணப்­பட்­டது. அடுத்த நிதி கொள்கை கூட்­டம் அக்­டோ­பர் முதல் வாரத்­தில் நடை­பெற உள்­ளது. அதில் வட்டி விகி­தம் குறைக்­கப்­பட வாய்ப்பு இல்லை
இனி வரும் நாட்­களில் பணப் புழக்­கத்தை பொறுத்து சந்­தை­யின் போக்கு அமை­யும். தற்­போது, அன்­னிய முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளான எப்.ஐ.ஐ., சந்­தை­யில் விற்­ப­னையை அதி­க­ரித்­துள்ளன. அமெ­ரிக்க பங்கு சந்தை குறி­யீடு டொவ்­ஜோன்ஸ், இந்த ஆண்டு, 32 முறை உச்­சத்தை தொட்டு வியா­பா­ரம் ஆகி­யது. நவம்­பர், 2016 அமெ­ரிக்க தேர்­த­லுக்கு பிறகு, டொவ் ஜோன்ஸ், 20 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. இந்த ஆண்டு இது­வரை, 3,௦௦௦ புள்­ளி­கள் அதி­க­ரித்து, வர­லாற்று சாதனை படைத்­தது குறிப்­பி­டத்­தக்­கது.
இதே காலத்­தில், நிப்டி இண்­டெக்ஸ், 2,௦௦௦ புள்­ளி­கள் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த வார இறுதி நாட்­களில், நிப்டி, 10 ஆயி­ரம் புள்­ளி­க­ளுக்கு கீழே வர்த்­த­கம் ஆனது. தற்­போது, 10 ஆயிரத்து, 137 ரெசிஸ்­டென்ஸ் ஆகும். இதை கடக்­கும் நிலை­யில், 10 ஆயிரத்து, 260 அடுத்த இலக்­கா­கும். பொது­வாக சந்தை உயர்ந்து வர்த்­த­க­மாக வாய்ப்­பு­கள் அதி­கம். 9,850 நல்ல சப்­போர்ட் ஆகும்.
கவ­னிக்க வேண்­டிய பங்­குகள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, மஹா­ந­கர் கேஸ் லிமி­டெட், அசோக் லேலாண்டுபால்­மர் லாறி லிமி­டெட், ராஷ்ட்­ரிய கெமிக்­கல்ஸ் அண்டு பெர்ட்­டி­லை­சர்ஸ்

-முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)