காலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியாகாலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பொறுமை காக்­குமா சந்தை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
08:17

பங்­குச் சந்தை தொடர்ந்து உயர்­நி­லை­யில் வீற்­றி­ருக்க, பல கார­ணங்­கள் உண்டு. நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, நிறு­வ­னங்­களின் வள­மான நிதி­நிலை மற்­றும் செயல்­தி­றன், கூடும் சேமிப்பு, குறைந்த பண­வீக்­கம், சொத்து ஒதுக்­கீடு மாற்­றங்­கள் என்று கார­ணங்­களை நாம் அடுக்­கிக் கொண்டே போக­லாம்.
இவற்றை அடிப்­ப­டைத் தன்மை சார்ந்த கார­ணங்­கள் மற்­றும் சூழல் சார்ந்த கார­ணங்­கள் என்று இரு வகை­யா­கப் பிரித்­துக் கொள்­ள­லாம். பொரு­ளா­தார சான்­று­க­ளோடு சந்தை உய­ரும்­போது, அது அடிப்­ப­டைத் தன்மை சார்ந்து அமை­கிறது. அத்­த­கைய சான்­று­க­ளின்றி சந்தை உய­ரும்­போது, அந்த வளர்ச்சி சூழல் சார்ந்து அமை­கிறது. சூழல் சார்ந்த வளர்ச்­சி­யும் பிறகு பொரு­ளா­தார அடிப்­ப­டைத் தன்­மை­யின் ஆத­ரவை பெறக்­கூ­டும்.
சாதகம்கடந்த, 2014ல், ஆட்சி மாற்­றம் ஏற்­பட்­ட­வு­டன் கண்ட சந்­தை­யின் அபார வளர்ச்சி, சூழல் சார்ந்து அமைந்­தது. ஆனால், அது தொடர்ந்து அடிப்­ப­டைத் தன்­மை­யின் ஆத­ர­வைப் பெறத் தவ­றி­யது. இதுவே சந்­தை­யின் வீழ்ச்­சிக்கு வித்­திட்­டது.இப்­போ­தும் சந்தை சூழல் சார்ந்து உயர்ந்து நிற்­கிறது. தொடர்ந்து பொரு­ளாதார அறி­கு­றி­களில் அடிப்­படை மாற்­றங்­கள் ஏற்­ப­டா­விட்­டால், சந்­தை­யின் வளர்ச்சி நிலைக்­காது. சந்தை எப்­போ­தெல்­லாம் சூழல் சார்ந்து உயர்­கி­றதோ, அப்­போ­தெல்­லாம் இந்த சிக்­கலை அது தனக்கு உரு­வாக்­கிக் கொள்­கிறது.
ஆனால், சந்­தை­யின் தற்­போ­தைய உயர்­வில், அடிப்­ப­டைத் தன்மை அறவே இல்லை என்று சொல்­லி­விட முடி­யாது. சேமிப்பு, பண­வீக்­கம், இடு­பொ­ருள்­களின் குறைந்த விலை, குறை­யும் வட்­டி­வி­கி­தம், கூடும் அன்னிய முத­லீ­டு­கள், புதிய வரிச் சட்­டங்­களின் பலன்­கள், கறுப்பு பொரு­ளா­தா­ரத்­திற்கு எதி­ரான தொடர் எதிர்­வி­னை­கள், சில்­லரை முத­லீ­டு­களின் பெருக்­கம், கூடும் நிர்­வாக ஆளுமை தரம் என்று அடிப்­ப­டைத் தன்­மை­யின் அறி­கு­றி­கள் பல சந்­தைக்கு சாத­க­மாக உள்ளன. இதில் குறை என்று சொல்­லக்­கூ­டிய முக்­கிய அறி­கு­றி­கள் பொரு­ளா­தார வளர்ச்சி, வங்­கித்­துறை சார்ந்த சீர்­தி­ருத்­தங்­களின் முன்­னேற்­றம், வாராக்­க­டன் பிரச்­னை­யின் தீர்வு நோக்­கிய நகர்வு மற்­றும் நிறு­வன அள­வில் வளர்ச்சி.
கைகொடுக்கவில்லைசந்­தை­யில் உள்ள முக்­கிய அச்­சம், இந்த அறி­கு­றி­கள், 2014ல் நடந்­தது போல மீண்­டும் நம்மை ஏமாற்றி விடுமோ என்­பதே. இது முழுக்க முழுக்க மத்­திய அர­சின் கையில் உள்­ளது. 2014ல் மழை பொய்த்­தது. இப்­போது, பொய்க்க வாய்ப்­பில்லை. 2014ல், உல­கப் பொரு­ளா­தா­ரம் நமக்கு கைகொ­டுக்­க­வில்லை. இப்­போது, அந்த நிலை இல்லை. வங்­கி­களின் பிரச்­னையை அரசு தீர்த்­தால் மீண்­டும் முத­லீ­டு­களின் வளர்ச்­சிக்கு அது வித்­தி­டும். அதே­போல, வரி­களில் வளர்ச்சி கண்­டால் அர­சால் பெரிய முத­லீ­டு­களை செய்ய முடி­யும். ஜி.எஸ்.டி., அதற்கு வித்­தி­டும் என்றே தோன்­று­கிறது.
இந்த இரு நகர்­வு­களின் தாக்­கம் வெளிப்­படும் வரை, சந்தை பொறுமை காக்­குமா என்ற சந்­தே­கம் பல­ருக்கு இருக்­கிறது. அதே சம­யம், சந்­தைக்கு வரும் பண­ வ­ரத்து, இப்­போ­தைக்கு அந்த கவலை இல்லை என்ற எண்­ணத்­தையே நமக்கு தரு­கிறது. தேக்­கமோ அல்­லது வீழ்ச்­சியோ, சந்தை காணும் ஒவ்­வொரு தரு­ணத்­தி­லும், முத­லீடு செய்ய காத்­தி­ருப்­போர், சந்­தைக்கு கை கொ­டுக்­கின்­ற­னர்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)