பதிவு செய்த நாள்
07 ஆக2017
08:19
வாழ்வின் பலன்களை அறுவடை செய்யும் வகையில் வாழ வேண்டும் என, ‘டை புரோக்’ எனும் புத்தகத்தின் மூலம் வலியுறுத்தி வியக்க வைத்தனர், ஸ்டீபன் போலன் மற்றும் மார்க் லெவைன்.
ஓய்வு காலத்திற்காக சேமித்து வைத்து, ஓய்வு பெறுவது மற்றும் வாரிசுகளுக்கு சொத்துக்களை விட்டுச்செல்லும் அம்சங்கள் சார்ந்த தனிநபர் நிதி கொள்கை அமெரிக்காவில் குடியேறியவர்களின் அணுகுமுறையால் உண்டானது. இப்போது வர்த்தக உலகம் உட்பட, எல்லாமும் மாறியிருக்கிறது. உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்க உதவும் வாய்ப்புகளை தேடி பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிகார அடுக்கில், மேலே வருவதற்கான முயற்சியில் நேரத்தை வீணடிக்காமல், உங்களுக்கான மதிப்பை உருவாக்கி கொள்ளுங்கள்.
வீடு தவிர, நீங்கள் வாங்க விரும்பும் எதையும் கடனில் வாங்காமல் ரொக்கத்தில் வாங்குங்கள். கடனில் வாங்குவதன் மூலம், பொருட்களை இப்போதே பெற நீங்கள் கூடுதல் பணத்தை செலவிடுகிறீர்கள்.நீங்கள் விரும்பிய செயல்களை செய்ய, ஓய்வு காலம் வரை காத்திருக்க வேண்டும் என்றில்லை. பணத்தை சம்பாதிக்கும் போதே நீங்கள் அவற்றை செய்யலாம். இதன் பொருள், ஓய்வுகால சேமிப்பு நிதியில் முதலீடு செய்யக்கூடாது என்பது அல்ல: அதை சரியாக பயன்படுத்திக் கொள்வதாகும்.
வாரிசுகளுக்கு சொத்துக்களை விட்டுச் செல்ல வேண்டும் என, நினைக்க வேண்டாம். அதற்கு பதில் ஓய்வுகால சேமிப்பில் எதிர்கால பென்ஷனுக்கான திட்டத்தில் இணையவும், மருத்துவ காப்பீடு பெறவும். கையில் உள்ள பணத்தை விரும்பியபடி செலவு செய்யவும். நீங்கள் விரும்பும் சேவை அமைப்புகளுக்கு நன்கொடை அளியுங்கள். வாரிசுகளுக்கு எதுவும் விட்டுச் செல்ல வேண்டாம் என்றில்லை. அதற்கு பதிலாக அவர்கள் சொந்த வீடு வாங்க முன்பணம் கொடுங்கள், பேரன்களின் கல்வி செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய விரும்புவதை இப்போதே செய்யுங்கள்.
அதிகார போட்டியில் ஈடுபடவில்லை எனில், நீங்கள் விருப்பம் போல செயல்படலாம். மற்றவர்களுக்காக குறிப்பிட்ட விதமாக உடை உடுத்த வேண்டாம். உங்களுக்கான வழியில் சுதந்திரமாக நடை போடுங்கள். இதே போல உங்கள் பெற்றோரும் பாதுகாப்பாக உணர வழி செய்யுங்கள். அவர்களுக்கான காப்பீட்டை அளியுங்கள். அவர்களும் விரும்பிய வகையில் வாழட்டும்.
குழந்தைகளையும் குடும்ப பட்ஜெட்டில் ஈடுபடுத்துங்கள். பணத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை புரிய வையுங்கள். பொருத்த மான காலத்தில் பகுதி நேர பணியில் ஈடுபட ஊக்குவியுங்கள்.முதலீட்டில் கவனம் செலுத்தக்கூடாது என்றில்லை. ஆனால், அது ஓய்வு காலத்திற்கான சேமிப்பை நோக்கி இருக்காமல், வாழும் போதே விரும்பிய வகையில் செயல்படுவதற்கு உதவ வேண்டும். ஏழையாக இறக்க நேரலாம், ஆனால், பணக்காரராக வாழுங்கள் என்பது தான் இந்த புத்தகம் சொல்லும் சேதி.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|