காலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியாகாலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
விரும்­பிய வகையில் வாழ்­வ­தற்­கான வழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
08:19

வாழ்வின் பலன்­களை அறு­வடை செய்யும் வகையில் வாழ வேண்டும் என, ‘டை புரோக்’ எனும் புத்­த­கத்தின் மூலம் வலி­யு­றுத்தி வியக்க வைத்­தனர், ஸ்டீபன் போலன் மற்றும் மார்க் லெவைன்.
ஓய்வு காலத்­திற்­காக சேமித்து வைத்­து, ஓய்வு பெறு­வது மற்றும் வாரி­சு­க­ளுக்கு சொத்­துக்­களை விட்­டுச்­செல்லும் அம்­சங்கள் சார்ந்த தனி­நபர் நிதி கொள்கை அமெ­ரிக்­கா­வில் குடி­யே­றி­ய­வர்­களின் அணு­கு­மு­றையால் உண்­டா­னது. இப்­போது வர்த்­தக உலகம் உட்­பட, எல்­லாமும் மாறி­யி­ருக்­கி­றது. உங்கள் மீதான மதிப்பை அதி­க­ரிக்க உதவும் வாய்ப்­பு­களை தேடி பயன்­ப­டுத்திக் கொள்­ளுங்கள். அதி­கார அடுக்கில், மேலே வரு­வ­தற்­கான முயற்­சியில் நேரத்தை வீண­டிக்­காமல், உங்­க­ளுக்­கான மதிப்பை உரு­வாக்கி கொள்ளுங்கள்.
வீடு தவிர, நீங்கள் வாங்க விரும்பும் எதையும் கடனில் வாங்­காமல் ரொக்­கத்தில் வாங்­குங்கள். கடனில் வாங்­கு­வதன் மூலம், பொருட்­களை இப்­போதே பெற நீங்கள் கூடுதல் பணத்தை செல­வி­டு­கி­றீர்கள்.நீங்கள் விரும்­பிய செயல்­களை செய்ய, ஓய்வு காலம் வரை காத்­தி­ருக்க வேண்டும் என்­றில்லை. பணத்தை சம்­பா­திக்கும் போதே நீங்கள் அவற்றை செய்­யலாம். இதன் பொருள், ஓய்­வு­கால சேமிப்பு நிதியில் முத­லீடு செய்­யக்­கூ­டாது என்­பது அல்ல: அதை சரி­யாக பயன்­ப­டுத்திக் கொள்­வ­தாகும்.
வாரி­சு­க­ளுக்கு சொத்­துக்­களை விட்­டுச் ­செல்ல வேண்டும் என, நினைக்க வேண்டாம். அதற்கு பதில் ஓய்­வு­கால சேமிப்பில் எதிர்­கால பென்­ஷ­னுக்­கான திட்­டத்தில் இணை­யவும், மருத்­துவ காப்­பீடு பெறவும். கையில் உள்ள பணத்தை விரும்­பி­ய­படி செலவு செய்­யவும். நீங்கள் விரும்பும் சேவை அமைப்­பு­க­ளுக்கு நன்­கொடை அளி­யுங்கள். வாரி­சு­க­ளுக்கு எதுவும் விட்­டுச்­ செல்ல வேண்டாம் என்­றில்லை. அதற்கு பதி­லாக அவர்கள் சொந்த வீடு வாங்க முன்­பணம் கொடுங்கள், பேரன்­களின் கல்வி செலவை ஏற்­றுக் ­கொள்­ளுங்கள். நீங்கள் செய்ய விரும்­பு­வதை இப்­போதே செய்­யுங்கள்.
அதி­கார போட்­டியில் ஈடு­ப­ட­வில்லை எனில், நீங்கள் விருப்பம் போல செயல்­ப­டலாம். மற்­ற­வர்­க­ளுக்­காக குறிப்­பிட்ட வித­மாக உடை உடுத்த வேண்டாம். உங்­க­ளுக்­கான வழியில் சுதந்­தி­ர­மாக நடை போடுங்கள். இதே போல உங்கள் பெற்­றோரும் பாது­காப்­பாக உணர வழி செய்­யுங்கள். அவர்­க­ளுக்­கான காப்­பீட்டை அளி­யுங்கள். அவர்­களும் விரும்­பிய வகையில் வாழட்டும்.
குழந்­தை­க­ளையும் குடும்ப பட்­ஜெட்டில் ஈடு­ப­டுத்­துங்கள். பணத்­திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்­பதை புரிய வையுங்கள். பொருத்­த­ மான காலத்தில் பகு­தி­ நேர பணியில் ஈடு­பட ஊக்­கு­வி­யுங்கள்.முத­லீட்டில் கவனம் செலுத்­தக்­கூ­டாது என்­றில்லை. ஆனால், அது ஓய்வு காலத்­திற்­கான சேமிப்பை நோக்கி இருக்­காமல், வாழும் போதே விரும்­பிய வகையில் செயல்­ப­டு­வ­தற்கு உதவ வேண்டும். ஏழை­யாக இறக்க நேரலாம், ஆனால், பணக்­கா­ர­ராக வாழுங்கள் என்­பது தான் இந்த புத்­தகம் சொல்லும் சேதி.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)