பதிவு செய்த நாள்
07 ஆக2017
08:20
வருமான வரித்துறையிடம் இருந்து வந்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் ஏமாற்று மெயில்கள் விஷயத்தில், விழிப்புடன் இருப்பது அவசியம் என, எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் காலத்தை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்று பேர்வழிகள், இ – மெயில் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வலை விரித்து வருகின்றனர். வருமானவரித் துறையிடம் இருந்து வந்திருப்பது போன்ற தோற்றத்தை கொண்டு மெயில்கள் மூலம் ரீபண்ட் பற்றி தகவல் தெரிவித்து பணத்தை திரும்ப பெற, முன்பணம் செலுத்துமாறு கோரி பணம் பறிக்க முயல்கின்றனர். ஒரு சில மெயில்கள் வங்கி கணக்கு விபரங்களையும் கோருகின்றன. இவற்றின் மூலம் பொய்யான இணையதளத்திற்கு அழைத்துச்சென்று விபரங்களை சமர்ப்பிக்க வைக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது.
வருமான வரித்துறை குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகே தகவல் அனுப்புகிறது. எனவே, உடனடியாக ஏதேனும் மெயில் வந்தால் அவை போலியாக இருக்கலாம். அதோடு வருமானவரித் துறை தனியே வங்கி கணக்கு தகவல்களை கேட்பதில்லை. மேலும் வருமான வரித்துறை அனுப்பும் எந்த தகவலிலும் போதிய அவகாசமும் அளிக்கப்பட்டிருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|