காலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியாகாலணி தயாரிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா ... பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஊதிய உயர்வும் 50:50 வழியும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
08:22

பணியில் இருப்­ப­வர்கள் ஊதிய உயர்வை எதிர்­பார்ப்­பதும், அதற்­காக கடி­ன­மாக உழைப்­பதும் இயல்­பா­னது தான். எதிர்­பார்த்­த­படி, ஊதிய உயர்வு கிடைத்­த­வுடன், அதற்­கேற்ப வாழ்க்கைத் தரத்தை உயர்த்­திக் ­கொள்ள தோன்­று­ வதும் இயல்­பா­னது தான். ஆனால், ஊதிய உயர்­வுக்கு ஏற்ப சேமிப்­பையும், முத­லீட்­டையும் அதி­க­மாக்க வேண்டும் என்­கின்­றனர் நிதி வல்­லு­னர்கள். இவற்றில், எதை பின்­பற்­று­வது எனும் குழப்­பமும் இருந்தால், அதற்கு தீர்­வாக 50;50 வழி முன்­வைக்கப் படு­கி­றது.
காத்­தி­ருக்கும் செல­வுகள்:
போனஸ் அல்­லது ஊதிய ஊயர்வு பெறும் போது அந்த தொகையை நீண்ட நாள் தேவை அல்­லது விருப்­பத்தை நிறை­வேற்­றிக் ­கொள்ள பயன்­ப­டுத்­திக் ­கொள்­ளலாம். சொந்த வாகனம் வாங்­கலாம் அல்­லது லேப் – டாப் வாங்­கலாம். தற்­போ­தைய தேவை­களை நிறை­வேற்­றிக் ­கொள்­ளலாம். தள்ளி வைத்­தி­ருந்த பல செல­வுகள் ஊதிய உயர்­வுக்­காக காத்­தி­ருக்­கலாம். புதிய விருப்­பங்­களும் தோன்­றலாம்.
எதிர்­கால நலன்:
ஊதிய உயர்வு மூலம் உட­னடி தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தோடு, வாழ்க்கைத் தரத்­தையும் கொஞ்சம் மேம்­ப­டுத்திக் கொள்­ளலாம் என்­றாலும், அந்த தொகையை முத­லீடு செய்தால் எதிர்­கால நலனை இன்னும் வலு­வாக்கி கொள்­ளலாம். ஒரு கட்­டத்தில் முழு­நேர வேலையை விட்டு வில­கு­வது போன்ற இலக்­கு­களை நோக்கி முன்­னே­றவும் இது கைகொ­டுக்கும். வருங்­கால பாது­காப்பு முக்­கி­ய­மா­னது.

செலவும், சேமிப்பும்:
வரு­மா­னத்­திற்கு ஏற்ப செல­வுகள் அதி­க­ரிக்கும். அதே போல சேமிப்பும் அதி­க­ரிக்க வேண்டும். எனவே, ஊதிய உயர்வில் ஒரு பாதியை தற்­போ­தைய செல­வு­க­ளுக்­காக ஒதுக்­கி­விட்டு, மீது பாதியை சேமிப்பு மற்றும் முத­லீட்­டிற்கு என, ஒதுக்க வேண்டும். இதன் மூலம் எதிர்­கால இலக்கை நோக்கி மேலும் வலு­வாக முன்­னே­றலாம். அதே நேரத்தில் தேவை­களை நிறை­வேற்­றிய மன நிறைவும் உண்­டாகும்.
குழப்­பத்­திற்கு தீர்வு:
ஊதிய உயர்வின் பலன், வாழ்­வியல் தேவையை நிறை­வேற்றும் வகையில் இருக்க வேண்­டுமா? அல்­லது எதிர்­கால நலனை கருத்தில் கொண்டு அமைய வேண்­டுமா எனும் கேள்வி, குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தலாம். இந்த குழப்­பத்­திற்­கான தீர்வு தான், 50:50 வழி. அதா­வது ஊதிய உயர்வின் பாதி தொகையை தற்­போ­தைய தேவைக்கும், மிதி தொகையை எதிர்­கால நல­னுக்கும் பயன்­ப­டுத்­திக்­கொள்­வது சரி­யாக இருக்கும்.

இலக்­குகள்:
முத­லீட்டை அதி­க­மாக்கும் போது, முதலில் போது­மான அவ­ச­ர­ கால நிதி கையில் இருப்­பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின் ஓய்வு கால நிதிக்­கான முத­லீட்டை அதி­க­மாக்­கலாம். பின்னர் அடுத்த ஐந்­தாண்­டு­களில் செய்­யக்­கூ­டிய இலக்­கு­க­ளுக்­காக முத­லீடு செய்­யலாம். இவற்­றுக்கு பொருத்­த­மான முத­லீடு வாய்ப்­பு­களை நாட வேண்டும். இந்த வழி­முறை, போன­சாக பெரும் தொகைக்கும் பொருந்தும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)