பதிவு செய்த நாள்
07 ஆக2017
08:22
பணியில் இருப்பவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதும், அதற்காக கடினமாக உழைப்பதும் இயல்பானது தான். எதிர்பார்த்தபடி, ஊதிய உயர்வு கிடைத்தவுடன், அதற்கேற்ப வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள தோன்று வதும் இயல்பானது தான். ஆனால், ஊதிய உயர்வுக்கு ஏற்ப சேமிப்பையும், முதலீட்டையும் அதிகமாக்க வேண்டும் என்கின்றனர் நிதி வல்லுனர்கள். இவற்றில், எதை பின்பற்றுவது எனும் குழப்பமும் இருந்தால், அதற்கு தீர்வாக 50;50 வழி முன்வைக்கப் படுகிறது.
காத்திருக்கும் செலவுகள்:
போனஸ் அல்லது ஊதிய ஊயர்வு பெறும் போது அந்த தொகையை நீண்ட நாள் தேவை அல்லது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். சொந்த வாகனம் வாங்கலாம் அல்லது லேப் – டாப் வாங்கலாம். தற்போதைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். தள்ளி வைத்திருந்த பல செலவுகள் ஊதிய உயர்வுக்காக காத்திருக்கலாம். புதிய விருப்பங்களும் தோன்றலாம்.
எதிர்கால நலன்:
ஊதிய உயர்வு மூலம் உடனடி தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு, வாழ்க்கைத் தரத்தையும் கொஞ்சம் மேம்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், அந்த தொகையை முதலீடு செய்தால் எதிர்கால நலனை இன்னும் வலுவாக்கி கொள்ளலாம். ஒரு கட்டத்தில் முழுநேர வேலையை விட்டு விலகுவது போன்ற இலக்குகளை நோக்கி முன்னேறவும் இது கைகொடுக்கும். வருங்கால பாதுகாப்பு முக்கியமானது.
செலவும், சேமிப்பும்:
வருமானத்திற்கு ஏற்ப செலவுகள் அதிகரிக்கும். அதே போல சேமிப்பும் அதிகரிக்க வேண்டும். எனவே, ஊதிய உயர்வில் ஒரு பாதியை தற்போதைய செலவுகளுக்காக ஒதுக்கிவிட்டு, மீது பாதியை சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கு என, ஒதுக்க வேண்டும். இதன் மூலம் எதிர்கால இலக்கை நோக்கி மேலும் வலுவாக முன்னேறலாம். அதே நேரத்தில் தேவைகளை நிறைவேற்றிய மன நிறைவும் உண்டாகும்.
குழப்பத்திற்கு தீர்வு:
ஊதிய உயர்வின் பலன், வாழ்வியல் தேவையை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டுமா? அல்லது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அமைய வேண்டுமா எனும் கேள்வி, குழப்பத்தை ஏற்படுத்தலாம். இந்த குழப்பத்திற்கான தீர்வு தான், 50:50 வழி. அதாவது ஊதிய உயர்வின் பாதி தொகையை தற்போதைய தேவைக்கும், மிதி தொகையை எதிர்கால நலனுக்கும் பயன்படுத்திக்கொள்வது சரியாக இருக்கும்.
இலக்குகள்:
முதலீட்டை அதிகமாக்கும் போது, முதலில் போதுமான அவசர கால நிதி கையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின் ஓய்வு கால நிதிக்கான முதலீட்டை அதிகமாக்கலாம். பின்னர் அடுத்த ஐந்தாண்டுகளில் செய்யக்கூடிய இலக்குகளுக்காக முதலீடு செய்யலாம். இவற்றுக்கு பொருத்தமான முதலீடு வாய்ப்புகளை நாட வேண்டும். இந்த வழிமுறை, போனசாக பெரும் தொகைக்கும் பொருந்தும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|