பதிவு செய்த நாள்
08 ஆக2017
00:24
புதுடில்லி : ‘‘ஐ.எச்.பி., என்ற பிராண்டு பெயரிலான கைத்தறி துணிகள் விற்பனை, நடப்பு நிதியாண்டில், இரு மடங்கு அதிகரித்து, 180 கோடி ரூபாயாக உயரும்,’’ என, கைத்தறி மேம்பாட்டு ஆணையர் ஷந்த்மனு தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது: ஐ.எச்.பி., என்ற பிராண்டில் சந்தைப்படுத்தப்படும், இந்திய கைத்தறி துணி வகைகளின் விற்பனை, 2016 – 17ம் நிதியாண்டில், 95.63 கோடி ரூபாயாக இருந்தது; இது, நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டின், ஏப்., – மே வரையிலான காலத்தில், 29.42 கோடி ரூபாயாக உள்ளது. அதாவது, மாதம் சராசரியாக, 15 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது.
இத்தகைய வளர்ச்சியால், நடப்பு நிதியாண்டுக்குள், இவற்றின் விற்பனை, இரு மடங்கு அதிகரித்து, 180 கோடி ரூபாயாக உயரும். சில்லரை விற்பனை கடைகளிலும், ஐ.எச்.பி., பிராண்டு கைத்தறி துணி வகைகளை விற்பனை செய்ய, ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|