பதிவு செய்த நாள்
08 ஆக2017
00:26
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, 12 வங்கிகள், ‘பேசல் – 3’ விதிமுறைகளின் கீழ், அவற்றின் மூலதன ஆதாய விகிதத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கில், பங்கு விற்பனை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளன.
இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய வங்கிகள், சர்வதேச வங்கி நடைமுறைகளை பின்பற்றி, 2019ல், அவற்றின் மூலதன ஆதாய விகிதத்தை உயர்த்த வேண்டும். இதற்காக, மத்திய அரசின் பங்கு மூலதனம் மட்டுமின்றி, வெளிச் சந்தையில் இருந்தும், 1.10 லட்சம் கோடி ரூபாய் திரட்ட வேண்டும்.
இதையொட்டி, பொதுத் துறையைச் சேர்ந்த, 12 வங்கிகள், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு அல்லது முன்னுரிமை அடிப்படையில், பங்கு முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்தில், பங்குகளை ஒதுக்கி, நிதி திரட்ட உள்ளன. இதில், ஆந்திரா பேங்க் உள்ளிட்ட, 67 வங்கிகள், நடப்பு நிதியாண்டு இறுதிக்குள், பங்கு விற்பனை மேற்கொள்ளும் என, தெரிகிறது. எஞ்சிய வங்கிகள், அடுத்த நிதியாண்டில் பங்குகளை விற்பனை செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் பேங்க், ஆந்திரா பேங்க், அலகாபாத் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, தேனா பேங்க், ஐ.டி.பி.ஐ., பேங்க் ஆகியவற்றின் பங்கு விற்பனைக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. சிண்டிகேட் பேங்க், யுகோ பேங்க், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, விஜயா பேங்க் ஆகியவை, பங்கு விற்பனை தொடர்பான நடவடிக்கைகளை துவக்கி உள்ளன.
அலகாபாத் வங்கி, 2,000 கோடி ரூபாய் திரட்டுவதற்கு, அதன் பங்குதாரர்களிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. அது போல, பஞ்சாப் நேஷனல் பேங்க், 3,000 கோடி ரூபாய் திரட்ட, இயக்குனர் குழு அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|