பங்கு விற்பனையில் 12 பொது துறை வங்கிகள்பங்கு விற்பனையில் 12 பொது துறை வங்கிகள் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.75 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.75 ...
‘ஆர்கானிக்’ பொருட்கள் தரத்தை அங்கீகரிக்க ஒரே அமைப்பு: மத்திய அரசுக்கு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2017
00:27

புதுடில்லி : ‘ஒரே அமைப்­பின் கீழ், ‘ஆர்­கா­னிக்’ பொருட்­களின் தரத்தை நிர்­ண­யிக்­கும் நடை­மு­றையை கொண்டு வந்­தால், அத்­துறை மேலும் சிறப்­பாக வளர்ச்சி காணும்’ என, சர்­வ­தேச பொரு­ளா­தார உற­வு­கள் குறித்து ஆய்வு செய்­யும் இந்­திய குழு­வான, ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர்., தெரி­வித்­துள்­ளது.

ரசா­யன கலப்பு உரம், பூச்சி மருந்து போன்­ற­வற்றை தவிர்த்து, இயற்கை உரம், பயிர் பாது­காப்பு பொருட்­கள் ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்தி சாகு­படி செய்­யப்­ப­டு­பவை, ‘ஆர்­கா­னிக் பொருட்­கள்’ என, அழைக்­கப்­ப­டு­கின்றன. இவ்­வகை இயற்கை விளை­பொ­ருட்­க­ளுக்­கும், அவற்­றின் மூலம் தயா­ரிக்­கப்­படும் உண­வுப் பொருட்­க­ளுக்­கும், இந்­தியா உட்­பட, உல­கெங்­கும் மவுசு அதி­க­ரித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில், இயற்கை வேளாண் பொருட்­கள் துறை­யைச் சேர்ந்த, 75 நிறு­வ­னங்­க­ளி­டம், ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர்., ஆய்வு மேற்­கொண்டு வெளி­யிட்­டுள்ள அறிக்கை: தற்­போது, இயற்கை பொருட்­களின் தர நிர்­ண­யம், அங்­கீ­கா­ரம் உள்­ளிட்ட நடை­மு­றை­கள், அரசு அமைப்­பு­கள் பல­வற்­றின் கட்­டுப்­பாட்­டில் உள்ளன. இது, இத்­து­றை­யின் வளர்ச்­சிக்கு பெரும் தடை­யாக உள்­ளது. பல அமைப்­பு­கள், பல்­வேறு ஒழுங்­கு­முறை கட்­டுப்­பா­டு­கள் உள்­ள­தால், இயற்கை பொருட்­களை ஏற்­று­மதி செய்­வோர் மட்­டு­மின்றி, அரசு அதி­கா­ரி­களும் குழப்­பத்­திற்கு உள்­ளா­கின்­ற­னர்.

இதற்கு, இயற்கை பொருட்­கள் ஏற்­று­ம­தி­யில், அந்­தந்த அரசு அமைப்­பு­களின் பங்கு குறித்து, தெளி­வாக வரை­ய­றுக்­கப்­ப­டா­மல் உள்­ளதே முக்­கிய கார­ணம்.வேளாண் மற்­றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுப் பொருட்­கள் ஏற்­று­மதி வளர்ச்சி அமைப்­பின் கீழ், இயற்கை பொருட்­கள் உற்­பத்­திக்­கான தேசிய திட்ட அமைப்பு உள்­ளது. இந்த அமைப்­பின் அங்­கீ­கா­ரம் பெற்ற பல்­வேறு நிறு­வ­னங்­கள், இயற்கை பொருட்­களின் ஏற்­று­ம­திக்கு சான்­றி­தழ் வழங்­கு­கின்றன. இது போல, பல அமைப்­பு­கள் வழங்­கும் சான்­றி­தழ்­க­ளால், சுங்க அதி­கா­ரி­கள், ஏற்­று­மதி ஆவ­ணங்­களை பரி­சீ­லித்து அனு­மதி வழங்­கு­வ­தில், தேவை­யற்ற தாம­தம் ஏற்­ப­டு­கிறது.

இது, இந்­தி­யா­வில் தொழில் செய்­வதை சுல­ப­மாக்­கும், மத்­திய அர­சின் முயற்­சிக்கு தடை­யாக உள்­ளது. நன்கு திட்­ட­மிட்ட நடை­மு­றை­கள், தெளி­வான விதி­மு­றை­கள் ஆகி­யவை இல்­லா­ததே, இதற்கு கார­ணம். ஆகவே, ஒரே அமைப்­பின் கட்­டுப்­பாட்­டில், இயற்கை பொருட்­கள் துறையை கொண்டு வர வேண்­டும். இதன் மூலம், இயற்கை உண­வு­கள் என்ற பெய­ரில் உல­வும், ‘போலி’ பொருட்­களின் புழக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யும்.

தவறு செய்­யும் நிறு­வ­னங்­கள் மீது, கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வழி­பி­றக்­கும். எல்­லா­வற்­றுக்­கும் மேலாக, நுகர்­வோர் ஏமாற்­றப்­ப­டா­மல், பாது­காப்­பான உண­வுப் பொருட்­களை பெற முடி­யும். இயற்கை வேளாண் பொருட்­கள், உரிய விதி­மு­றை­களை பின்­பற்றி உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­ற­னவா என்­ப­தை­யும், அவற்­றின் தரத்­தை­யும் ஆய்வு செய்­யும் பணியை, இந்­திய உணவு பாது­காப்பு மற்­றும் தர நிர்­ணய ஆணை­யத்­தி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)