பதிவு செய்த நாள்
08 ஆக2017
10:43
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் துவங்கி, சரிவுடன் வர்த்தகமாகின.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் காலாண்டு லாபம் உயர்ந்ததாலும், உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாகவும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.10 புள்ளிகள் உயர்ந்து 32,343.77-ஆகவும், நிப்டி 25.20 புள்ளிகள் உயர்ந்து 10,082.60-ஆகவும் வர்த்தகமாகின.
ஆனால், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்ற - இறக்கம் காரணமாகவும் வர்த்தகம் சரிய தொடங்கின. காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 220 புள்ளிகள் சரிந்து 32,053.15-ஆகவும், நிப்டி 70 புள்ளிகள் சரிந்து 9,987.85-ஆகவும் வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|