பதிவு செய்த நாள்
09 ஆக2017
08:16
மும்பை : காப்பீட்டு பாலிசி எடுப்பதற்கும், ‘ஆதார்’ அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்படலாம் என, தெரிகிறது.
இது குறித்து, மும்பையில், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர், டி.எஸ்.விஜயன், செய்தியாளர்களிடம் பேசியதாவது: வங்கியில் கணக்கு துவக்குவோர், ‘வாடிக்கையாளரை தெரிந்து கொள்வோம்’ என்ற பிரிவின் கீழ், ஆதார் விபரங்களை வழங்க வேண்டும் என்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், காப்பீட்டிற்காக விண்ணப்பிப்போர், இதே பிரிவின் கீழ், பல்வேறு தகவல்களை வழங்கினாலும், ஆதார் விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது, கட்டாயம் ஆக்கப்படவில்லை.
இது, மிக எளிமையான வழிமுறை. ஒரு வாடிக்கையாளரை அறிந்து கொள்வதற்கு, இதை விட எளிமையான வழி இருக்குமா என, தெரியவில்லை. அதனால், காப்பீட்டு துறையில், ‘வாடிக்கையாளரை அறிந்து கொள்வோம்’ நடைமுறையை, மேலும் சுலபமாக்குவது தொடர்பாக, அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம். பொதுத் துறை நிறுவனங்களில், எல்.ஐ.சி.,யின் பங்கு முதலீட்டிற்கு, 15 சதவீத வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒருசில சந்தர்ப்பங்களில், இந்த வரம்பை தளர்த்தி, அதிகளவில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், கூடுதல் முதலீட்டை குறைத்து, நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
காப்பீட்டு திட்டங்களின் வினியோகத்தில், 20 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி வருகின்றனர். தொழில்நுட்ப வசதி காரணமாக, தற்போது காப்பீட்டு திட்டங்கள் வலைதளத்திலேயே கிடைக்கின்றன. எனினும், அதில், முகவர்களிடம் நேரடியாக பேசி, பாலிசி எடுப்பது போன்ற அனுபவத்தை பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|