பதிவு செய்த நாள்
09 ஆக2017
16:56
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்துள்ளன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமானது. இவை எல்லாவற்றையும் விட அமெரிக்கா - வடகொரியா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன்காரணமாக உலகம் முழுக்க பங்குச்சந்தைகளில் ஒரு மந்தமான சூழலே நிலவியது. அதன்தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்ததால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவையே சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 216.35 புள்ளிகள் சரிந்து 31,797.84-ஆகவும், நிப்டி 70.50 புள்ளிகள் சரிந்து 9,908.05-ஆகவும் முடிந்தன.
இதன்மூலம் சென்செக்ஸ் 32 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சென்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|