பதிவு செய்த நாள்
11 ஆக2017
00:00
புதுடில்லி : ‘நடப்பாண்டில், 35 கோடி மொபைல் போன்கள் விற்பனையாகி உள்ளன; இது, 2016ல் விற்பனையான, 28 கோடியை விட அதிகம்’ என, அசோசெம் மற்றும் கே.பி.எம்.ஜி., இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: இந்தியாவில், நான்கு ஆண்டுகளில், ‘ஸ்மார்ட் போன்’கள் மிகவும் பிரபலமடைந்து உள்ளன. மேலும், 2016ல், மொத்த மொபைல் போன்கள் விற்பனையில், 43 சதவீதம் அளவிற்கு, ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி உள்ளன. மொபைல் போன் ஏற்றுமதி, 2008 – 12 வரையிலான காலத்தில், 12 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, அடுத்த இரு ஆண்டுகளில், 30 சதவீதம் குறைந்து, மீண்டும் எழுச்சி கண்டுள்ளது.
மத்திய அரசின், ‘மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா’ போன்ற திட்டங்கள் மூலம், 2015 – 16ல், 54 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த, மொபைல் போன் விற்பனை, 2016 – 17ல், 90 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அடுத்து வர உள்ள, ‘5ஜி’ தொழில்நுட்பம், கருவிகளுக்கு இடையேயான இணைய பயன்பாடு உள்ளிட்ட பல அம்சங்களும், ‘டிஜிட்டல் இந்தியா’ போன்ற திட்டங்களும், மொபைல் போன் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க துணை புரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|