பதிவு செய்த நாள்
11 ஆக2017
00:01
புதுடில்லி : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜ்யசபாவில் பேசியதாவது: அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையின் கீழ், 11 துறைகளில், முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த வகையில், அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக, 99 விண்ணப்பங்கள், ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. அவற்றில், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையில் மட்டும், 48 விண்ணப்பங்கள் உள்ளன. மற்றபடி, பொருளாதார விவகாரங்கள் துறையில், 13 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.மருந்து, தொலை தொடர்பு, உள்துறை ஆகியவற்றில், முறையே, 14, 8 மற்றும் 5 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு, 9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,347 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|