பதிவு செய்த நாள்
14 ஆக2017
08:04
இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் சரிவில் முடிவடைந்தது. தொடர்ந்து, 7 மாத உயர்வுக்குப் பின், இந்த மாதம் சிறிய இறக்கம் காணப்படுகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி, தன் வரலாற்று உச்சத்தில், அதாவது, 10,137 புள்ளிகளிலிருந்து, 443 புள்ளிகள், அதாவது, 4.37 சதவீத சரிவை சந்திக்க நேரிட்டது.
கடந்த வாரம், ஆசிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளும் சரிவில் முடிவடைந்தன. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அசாதாரண சூழல் மற்றும்,அமெரிக்க பசிபிக் கடலில், வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தும் என்ற அறிவிப்பு காரணமாக ஏற்பட்ட சஞ்சலம் ஆகியவற்றால், அனைத்து பங்கு சந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகின. மேலும் நிறுவனங்களின், முதல் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியீடுகளும் சாதகமாக இல்லாதது, சந்தை வீழ்ச்சிக்கு வழிகோலியது. பாரத் பெட்ரோலியம், ஸ்டேட் பேங்க், சிப்லா, சன் பார்மா போன்ற முன்னணி நிறுவனங்களும் இதில் அடங்கும்.
வி.ஐ.எக்ஸ்., எனப்படும் வோலட்டைலிங் இண்டெக்ஸ் எனும் குறியீடு, 5.3 சதவீதம் உயர்ந்து உள்ளது. இதில் சந்தையில் ஷார்ட் பொசிஷன் அதிகரித்துள்ளது என கருதப்படுகிறது. பொதுவாகவே, வி.ஐ.எக்ஸ்., உயரும்போது, சந்தை இறங்கும், வி.ஐ.எக்ஸ்., குறையும் போது சந்தை வலுப்படும். மேலும், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி, ஷெல் நிறுவனங்களுக்கு எதிராக ஆய்வு நடத்த உள்ளது. 130 நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட உள்ளது. வரும் நாட்களில் சந்தையில் இறக்கம் காணப்படும்.
நாளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு, பங்கு வர்த்தகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எப்.அண்டு ஓ., பிரிவில், கால் ஆப்ஷன், 10 ஆயிரம் புள்ளிகளும், புட் ஆப்ஷன், 9,500 புள்ளிகளுமாக அதிக அளவிலான பங்கேற்பு காணப்படுகிறது. கடந்த, 6 ஆண்டுகளில், ஆகஸ்ட் மாதத்தில், சந்தை மூன்று முறை சரிந்தும், இரு முறை உயர்ந்தும் காணப்பட்டது. இந்த மாதம், இதுவரை சரிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 9,650 நல்ல சப்போர்ட் ஆகும். ரெசிஸ்டென்ஸ், 9,890 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்பஞ்சாப் நேஷனல் பேங்க், எச்.எப்.டி.சி., பெட்ரொநெட் இ.பி.சி., இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ்
-முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|