பதிவு செய்த நாள்
14 ஆக2017
08:16
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் பலர், தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், புதிய நுட்பங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அரசின் விசா கெடுபிடி, தானியங்கிமயமாக்கலின் தாக்கம் காரணமாக, ஐ.டி., துறையில், வேலைவாய்ப்பில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, தங்களை தயார் படுத்திக் கொள்வதில் அனுபவசாலிகள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். ஐந்து முதல் பத்தாண்டு அனுபவம் மிக்க ஊழியர்கள், தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள, புதிய நுட்பங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக, வேலை வாய்ப்பு துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்காலத்தில் தேவைப்படக்கூடிய நுட்பங்களை கற்றுக்கொள்ளும் வகையில், இவர்கள் இணைய பயிற்சி திட்டங்களிலும் சேர்ந்து, பயின்று வருகின்றனர். இதற்காக அதிக தொகையை செலவிடவும் தயாராக உள்ளனர். மறுதிறன் பெறுதல் என சொல்லப்படும் இந்த உத்தி மூலம், தற்போது புரோகிராமராக உள்ள ஒருவர், எதிர்காலத்தில் தரவுகள் சார்ந்த அலசல் உள்ளிட்ட துறைகளில், புதிய பொறுப்புகளை பெறலாம் என கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|