தங்கம் இறக்குமதி விர்ர்...: தென் கொரியா காரணம்?தங்கம் இறக்குமதி விர்ர்...: தென் கொரியா காரணம்? ... ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.29 ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.29 ...
153 பொது பயன்பாட்டு பொருட்களுக்கு ‘இ – வே பில்’ அளிப்பதில் விலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2017
23:55

புதுடில்லி : மக்­கள் பயன்­பாட்­டிற்­கான, சமை­யல் எரி­வாயு, மண்­ணெண்­ணெய், தங்க ஆப­ர­ணங்­கள் போன்ற, 153 பொருட்­க­ளுக்கு, ‘இ – வே பில்’ தயா­ரித்து அளிப்­ப­தில் இருந்து விலக்­க­ளிக்க, ஜி.எஸ்.டி., கவுன்­சில் ஒப்­பு­தல் வழங்கி உள்­ளது.

ஜூலை, 1ல், நாடு முழு­வ­தும், ஜி.எஸ்.டி., நடை­முறை அம­லா­கி­யது. இதன் மூலம், பல முனை வரி­கள் நீங்கி, ஒரே வரி விதிப்பு முறை நடை­மு­றைக்கு வந்­துள்­ளது.இந்த வரி விதிப்பு முறை­யில், 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேற்­பட்ட மதிப்­பில், சரக்­கு­களை கொண்டு செல்­வ­தற்கு, ‘இ – வே பில்’ கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்­ளது. இதன்­படி, பொருட்­கள் தயா­ரிப்பு, வினி­யோ­கம், போக்­கு­வ­ரத்­திற்கு பயன்­படும் வாக­னம், விற்­பனை உள்­ளிட்ட விப­ரங்­களை, கணி­னி­யில் பதி­வேற்றி, ‘இ – வே பில்’லை தயா­ரிக்க வேண்­டும்.

இதை, சரக்கு போக்­கு­வ­ரத்­தின் போது கையோடு எடுத்­துச் சென்று, வழி­யில் சோதனை மேற்­கொள்­ளும் வரி அதி­கா­ரி­க­ளி­டம் காட்ட வேண்­டும். வரி ஏய்ப்பை தடுக்­கும் இந்த, ‘இ – வே பில்’ திட்­டத்­திற்­கான சாப்ட்­வேர் உரு­வாக்­கும் பணி­யில், தேசிய தக­வல் ஆவண மையம் ஈடு­பட்­டுள்­ளது. அக்­டோ­ப­ரில் இப்­ப­ணி­கள் முடி­வ­டைந்து, ‘இ – வே பில்’ நடை­முறை அம­லுக்கு வரும் என, தெரி­கிறது.

இது குறித்து, நிதி­ய­மைச்­சக மூத்த அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கடந்த, 5ம் தேதி, டில்­லி­யில், ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டம் நடை­பெற்­றது. இதில், மக்­கள் பொது­வாக பயன்­ப­டுத்­தும், 153 பொருட்­களின் போக்­கு­வ­ரத்­திற்கு, ‘இ – வே பில்’ அளிப்­ப­தில் இருந்து விலக்­க­ளிக்க ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டது. இதன்­படி, சமை­யல் எரி­வாயு, ஆப­ர­ணங்­கள், கரன்சி, தபால்­கள் உள்­ளிட்­ட­வற்றை கொண்டு செல்ல, ‘இ – வே பில்’ தேவை­யில்லை. இத்­து­டன், மோட்­டார் பொருத்­தாத வாக­னங்­களில் கொண்டு செல்­லப்­படும் பொருட்­க­ளுக்­கும், விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.

இது, சர்­வ­தேச துறை­மு­கங்­களில் இருந்து, சுங்க சோத­னைக்­காக, உள்­ளூர் துறை­மு­கங்­க­ளுக்கு கொண்டு செல்­லும் சரக்­கு­க­ளுக்­கும், ஒரு மாநி­லத்­தில், 10 கி.மீ., துாரத்­திற்­குள் நடை­பெ­றும் சரக்கு போக்­கு­வ­ரத்­திற்­கும் பொருந்­தும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள்:
வீட்டு பயன்­பாட்­டிற்­கான சமை­யல் எரி­வாயு, பொது வினி­யோக திட்­டத்­திற்­கான மண்­ணெண்­ணெய், தபால் பைகள், கரன்­சி­கள், நகை­கள், உப­யோ­கித்த தனி­ ந­பர் மற்­றும் வீட்டு பயன்­பாட்டு பொருட்­கள், கால்­ந­டை­கள், பன்றி, மீன், காய்­க­றி­கள், பழங்­கள், பால், தேன், விதை­கள், தானி­யங்­கள் மற்­றும் மாவு வகை­கள், பூஜை பொருட்­கள், காது கேட்பு கரு­வி­கள், தலை­முடி, விந்­தணு மற்­றும் உறைய வைக்­கப்­பட்ட விந்­தணு, ஆணுறை, கருத்­தடை மாத்­தி­ரை­கள், வெற்­றிலை, கள்ளு, கச்சா பட்டு, காதி துணி, மண் பானை, களி­மண் விளக்­கு­கள் உள்­ளிட்­டவை. மொத்­தம், 153 பொருட்­களை கொண்டு செல்­வ­தற்கு முன், ‘இ – வே பில்’ தயா­ரித்து எடுத்­துச் செல்­வ­தில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)