பதிவு செய்த நாள்
17 ஆக2017
08:39
மும்பை : ரிசர்வ் வங்கி, ‘டிஜிட்டல்வாலட்’ எனப்படும், மின்னணு பணப் பை சேவை குறித்த புதிய விதிமுறைகளை, ஓரிரு வாரத்தில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு ஆகியவற்றில் இருந்து, குறிப்பிட்ட தொகையை, மின்னணு பணப் பைக்கு மாற்றி, அதன் மூலம், தேவையான பொருட்களை வாங்கலாம். மின்னணு பணப் பையில் ரொக்கமாக செலுத்தியும், பல்வேறு சேவைகளை பெறலாம்; வேறு ஒருவரின் மொபைல் போனுக்கு பணம் அனுப்புவது, ரீ – சார்ஜ் செய்வது உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இத்தகைய மின்னணு பணப் பை சேவையில், ‘பேடிஎம், மொபிக்விக்’ ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
கடந்தாண்டு இச்சேவைக்கு விண்ணப்பித்த, அமேசான், பைன் லேப்ஸ் நிறுவனங்களுக்கு, சமீபத்தில் உரிமம் வழங்கப்பட்டது. இந்நிலையில், மின்னணு பணப் பை சேவையில் களமிறங்க, ஆர்வமாக உள்ள பல நிறுவனங்கள், அது தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள விதிமுறைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|