பதிவு செய்த நாள்
17 ஆக2017
08:40
சென்னை : கரூர் வைஸ்யா வங்கியில், ‘ஆதார்’ அட்டை பெறுவதற்காக பதிவு செய்யும் வசதி, நாட்டிலேயே முதல் முறையாக, நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவ்வங்கியின், சென்னை, சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலை கிளையில், இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியை, ஆதார் பதிவு எண்ணை வழங்கும், மத்திய அமைப்பான, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள எண் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. இங்கு, வங்கி வாடிக்கையாளர் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும், ஆதார் பதிவு, முகவரி, பெயர் மாற்றம் என, பல்வேறு சேவைகளை பெறலாம். இந்த வசதியை, பெங்களூரில் உள்ள, யு.ஐ.டி.ஏ.ஐ., கூடுதல் டைரக்டர் ஜெனரல், டி.எம்.கஜாரே, நேற்று துவங்கி வைத்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: ஆதார் பதிவு மையங்களை, நாங்கள் அமைத்துக் கொண்டிருந்தோம். இப்போது, அந்த சேவையில் ஈடுபட வங்கிகளும் ஆர்வம் காட்டுகின்றன. கரூர் வைஸ்யா வங்கி, நாட்டிலேயே முதல் முறையாக, அதன் கிளைக்குள்ளேயே ஆதார் பதிவு வசதியை, அறிமுகம் செய்கிறது. அனைத்து கிளைகளுக்கும், இது விரிவுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கரூர் வைஸ்யா வங்கி, செயல்பாடுகள் பிரிவு பொது மேலாளர், சி.சரவணன் உடன் இருந்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|