கரூர் வைஸ்யா வங்கியில் ‘ஆதார்’ அட்டை பதிவுகரூர் வைஸ்யா வங்கியில் ‘ஆதார்’ அட்டை பதிவு ... தொலை தொடர்பு சேவைக்கான இணைப்பு கட்டணம் குறைகிறது; முன்னணி நிறுவனங்கள் அச்சம் தொலை தொடர்பு சேவைக்கான இணைப்பு கட்டணம் குறைகிறது; முன்னணி நிறுவனங்கள் ... ...
‘சிக்கனம் தான் நிறுவனங்களை வளர்க்கும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
08:41

பெங்களூரு : ‘‘ஒரு நிறு­வ­னம் வளர்ச்சி காண வேண்­டு­மென்­றால், அதன் தலை­வர், தலைமை செயல் அதி­காரி உள்­ளிட்­டோர் அனை­வ­ரும், சிக்­க­னத்தை கடை­பி­டிக்க வேண்­டும்,’’ என, ‘இன்­போ­சிஸ்’ நிறு­வ­னர் நாரா­ய­ண­மூர்த்தி வலி­யு­றுத்தி உள்­ளார்.

பெங்­க­ளூ­ரில், அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் மேலும் பேசி­ய­தா­வது: உங்­கள் சம்­பாத்­தி­யத்தை விட, குறை­வாக செலவு செய்­வது மிக­வும் முக்­கி­யம். இது, ஒரு நிறு­வ­னத்­தின் தலை­வர் மற்­றும் தலைமை செயல் அதி­காரி முதல், சாதா­ரண ஊழி­யர் வரைக்­கும் பொருந்­தும். ஒரு நிறு­வ­னம் செல­வ­ழிக்­கும் ஒவ்­வொரு காசுக்­கும், உரிய மதிப்பு கிடைக்க வேண்­டும். ஒரு பணியை குறு­கிய காலத்­தில், தர­மாக முடித்து தரு­வது குறித்து, ஊழி­யர்­கள் சிந்­திக்க வேண்­டும். இதற்கு விடை காணும் நிறு­வ­னங்­களின் வரு­வாய், தானாக உய­ரும்.

தொழில்­நுட்­பங்­களை புகுத்தி, பணி­களை சுல­ப­மாக முடிக்­கும் நிறு­வ­னங்­களின் செல­வி­னம் குறை­யும். இது, நிறு­வ­னங்­களின் வளர்ச்­சிக்கு வழி­வ­குக்கும். பணி­யா­ளர்­களின் உற்­பத்தித் திறனை அதி­க­ரிக்க, அவர்­க­ளுக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்­டும். இதன் மூலம், நிறு­வ­னத்­தின் உற்­பத்தி பெரு­கும்.அரசு, புதிய நிறு­வ­னங்­களின் துவக்க காலத்­தில், வரிச்­ச­லு­கை­களை வழங்க வேண்­டும். இது, தொழில்­மு­னை­வோரை ஊக்­க­ம் அளித்து, உற்­பத்தி பெருக துணை புரி­யும். நிதி, விற்­பனை மற்­றும் இதர துறை­க­ளி­லும், தொழில்­மு­னை­வோ­ருக்­கான பயிற்சி திட்­டங்­களை, அரசு ஊக்­கு­விக்க வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

‘இன்­போ­சிஸ்’ தலைமை செயல் அதி­காரி, விஷால் சிக்கா உள்­ளிட்ட உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு, மிகப் பெருந்­தொகை ஊதி­ய­மாக வழங்­கப்­ப­டு­வது குறித்து, நாரா­ய­ண­மூர்த்தி, ஏற்­க­னவே அதி­ருப்தி தெரி­வித்­தி­ருந்­தார். ‘ஐ.டி., நிறு­வ­னங்­களில், உய­ர­தி­கா­ரி­கள் ஊதி­யத்தை குறைத்­துக் கொண்­டால், இளை­ஞர்­களின் பணி­யி­டங்­கள் பறி­போ­வதை தடுக்க முடி­யும்’ என, அவர் தெரி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)