பதிவு செய்த நாள்
17 ஆக2017
10:28
மும்பை : உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. முக்கிய நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகரித்துள்ளதும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஆக.,17, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 166.62 புள்ளிகள் உயர்ந்து 31,937.51 புள்ளிகளாகவும், நிப்டி 50.50 புள்ளிகள் உயர்ந்து 9947.80 புள்ளிகளாகவும் உள்ளன. ஐடி, உலோகம், கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகளின் பங்குகள் 1.62 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 3.27 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்ட போதிலும், ஜப்பான் பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|