பதிவு செய்த நாள்
18 ஆக2017
00:14
மும்பை : சிறந்த சேவைக்கு, கூடுதல் தொகை தர, இந்தியர்கள் தயாராக உள்ளது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்காக, கன்டர் ஐ.எம்.ஆர்.பி., நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.இதில், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களைச் சேர்ந்த, 1,577 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் பயன்படுத்தும் ‘கிரெடிட் கார்டு, டிவி, ஸ்மார்ட்போன்’ உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா, விமான பயணம் ஆகியவற்றின் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: ஆய்வில் பங்கேற்ற வாடிக்கையாளர்களில், 42 சதவீதத்தினர், சிறந்த சேவை கிடைத்தால், கூடுதல் தொகை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கு, 20 – 40 சதவீதம் அதிகமாக பணம் தர தயார் என, 53 சதவீதத்தினர் கூறியுள்ளனர். தங்கள் கருத்துக்களை செயல்படுத்தும் நிறுவனங்களின் சேவைக்கு, கூடுதல் தொகை தர விரும்புவதாக, 31 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அனைத்து இடங்களிலும் சேவை கிடைத்தால், அதிக தொகை தருவதில் தயக்கமில்லை என, 27 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.
வாடிக்கையாளர் சேவை மோசமாக இருந்தால், அந்நிறுவனப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என, 66 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சொன்ன வாக்குறுதியை காப்பாற்றும், ‘பிராண்டு’ களுக்கு கூடுதல் தொகையை தர, 83 சதவீதத்தினர், தயாராக உள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் பிராண்டுகளை அறிந்து கொள்வதாக, 80 சதவீதம் பேர் கூறியுள்ளனர். வலைதளங்கள் மூலம் பிராண்டுகளை அறிந்து கொள்வது மற்றும் விசாரணைகளை மேற்கொள்வதாக, முறையே, 81 மற்றும் 48 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|