நியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் மருந்து விலையை குறைக்க நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு அமைக்க முடிவுநியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் மருந்து விலையை குறைக்க ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உண்­மை­யான செல்வம் எது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2017
05:41

பலரும் பாது­காப்­பாக உணர்­வ­தற்­காக பணத்தை சேர்க்­கின்­ற­னரேத் தவிர, வாழ்க்­கையின் ஆனந்­தத்தை அனு­ப­விக்க பயன்­ப­டுத்­து­வ­தில்லை எனக் கூறும் கிறிஸ் கிளார்க், ‘ட்ரு பேமிலி வெல்த்’ புத்­த­கத்தில், உண்மை­யான செல்வம் எது என, அடை­யாளம் காட்­டு­கிறார்.

நம்மில் பெரும்­பா­லானோர், செல்வம் என்­பது, பணம் என்று தான் நினைக்­கிறோம். வங்­கியில் உள்ள பணம், வீட்டின் மதிப்பு அல்லது நிதி முத­லீ­டு­களை செல்வம் என நினைக்­கிறோம். ஒரு சிலர் இதை தேடிச்­ செல்­கின்­றனர்; சிலர் பதுக்கி வைக்­கின்­றனர், சிலர் இதைக்­கண்டு அஞ்­சு­கின்­றனர். நம்மில் பல­ருக்கு பணம் என்­பது பாது­காப்பை குறிக்­கி­றது. இதை சேர்ப்­பதில் தான் வாழ்வின் பெரும் பகு­தியை செல­வி­டு­கிறோம். நம்மில் சிலர், இது பற்றி ஓயாமல் அச்சம் கொள்­கிறோம்.

பல­ருக்கு பணம் தொடர்­பான புரிதல் சிக்­க­லாக இருக்­கி­றது. அதிக பணம் வைத்­துள்­ள­வர்கள் அதை இழந்து விடு­வோமோ என, அஞ்­சு­கின்­றனர். அவர்கள் தங்கள் மற்றும் பிள்­ளைகள் எதிர்­காலம் பற்றி கவலை கொள்­கின்­றனர். நீங்கள் செழு­மை­யாக உண­ரா­விட்டால் பணக்­கா­ர­ராக இருப்­பதில் பல­னில்லை.இளம் தலை­மு­றை­யினர் பலரும் பணம் குறித்து அச்சம் கொள்­கின்­றனர். இது அவர்­களின் வாழ்க்கை தேர்­வு­களை பாதிக்­கி­றது. அவர்கள் பணத்­துடன் வளர்ந்­தாலும் கூட, எதிர்­கா­லத்தில் தாங்கள் விரும்­பிய வாழ்க்­கையை பெற முடி­யுமா என அச்சம் கொள்­கின்­றனர்.

செல்வம் இருக்­கி­றதோ இல்­லையோ பெரும்­பா­லானோர் பணத்­து­ட­னான உற­விலும், மற்­ற­வர்­க­ளு­ட­னான உற­விலும் தடு­மா­று­கின்­றனர். பணம் தொடர்­பான நம் அணு­கு­முறை தவ­றாக இருக்­கி­றது. பணம் என்­பது ஒரு கருவி தான் என்­பதை உணர வேண்டும். நாம் செல்வம் பற்றி மறு யோசனை செய்ய வேண்டும். செல்வம் என்­பது நாம் பொக்­கி­ஷ­மாக நினைப்­பதை அதி­க­மாக கொண்­டி­ருப்­ப­தாகும். இது தான் உண்­மை­யான செல்வம். இதில் பணமும் அடங்கும். நாம் நேசிக்கும் மனி­தர்­களும் அடங்­குவர். உண்­மை­யான செல்வம் என்­பது நல்ல ஆரோக்­கியம், தன்­னம்­பிக்கை மற்றும் அதிக சுய­க­வு­ர­வ­மாகும். கல்வி மற்றும் வாழ்நாள் முழு­வதும் கற்­ப­தற்­கான ஆர்வம் கொண்­டி­ருப்­பதும் செல்வம் தான். தனிப்­பட்ட வாழ்க்­கையில் தெளி­வான இலக்கு கொண்­டி­ருப்­பது மற்றும் வாழ்க்கை திசையில் தெளிவு கொண்­டி­ருப்­பது தான் செல்­வ­மாகும்.

உண்­மை­யான செல்வம் என்­பது நம்­மு­டைய அனு­ப­வங்கள், வாழ்க்கை பாடங்கள், நம் பாரம்­பரியம் மற்றும் நினை­வுகள் ஆகும். வேறு­வி­த­மாக சொல்­வது என்றால், உண்­மை­யான செல்வம் என்­பது தெளி­வான மற்றும் மகத்­தான இலக்கு, அன்­பான உற­வுகள் மற்றும் சாத­னை­களால் உரு­வா­வது. அன்­பான உற­வுகள் இல்­லாத பணம் மிகவும் மேலோட்­ட­மா­னது. அதே நேரத்தில் பணம் இல்­லாத அன்­பான உற­வுகள் வீண­டிக்­கப்­பட்ட வாய்ப்­பு­க­ளா­கின்­றன. ஒவ்­வொரு உறுப்­பி­னரும் செழித்து வளரும் போது தான் ஒரு குடும்பம் வள­மாக இருக்­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)