பதிவு செய்த நாள்
21 ஆக2017
05:43
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அறிமுகம் போன்ற நடவடிக்கைகளால் நிதி சேவைகள் மீது முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள தொய்வு மற்றும் வீட்டு மதிப்பு உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்கம் ஆகிய அம்சங்கள் காரணமாகவும், முதலீட்டாளர்கள் பவுதீக வகையான முதலீடுகளில் இருந்து நிதி சேவை சார்ந்த முதலீடுகள் மீது அதிக ஆர்வம் காட்டத்துவங்கியிருப்பதாக ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வங்கி சாராத நிதி இடைமுக நிறுவனங்களை நோக்கி குவியும் சேமிப்பு நிதியாக்கம் எனும் பொருள்படும் அந்த அறிக்கை, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் வீடுகளின் சேமிப்பு முதலீடு செய்யும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மியூச்சுவல் பண்ட் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் முதலீடு அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.
ஜி.எஸ்.டி., அறிமுகம் மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், பினாமி சீர்திருத்த சட்டம் ஆகியவையும் இந்த போக்கு வலுப்பெற உதவியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியை பொருளாதாரத்தின் ஆக்கப்பூர்வமான பகுதிக்கு மாற்றுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|