பதிவு செய்த நாள்
21 ஆக2017
05:44
மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது, இ.டி.எப்., நிதியான, ‘பாரத் 22’ நிதி முதலீட்டாளர்கள் மத்தியில் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த இ.டி.எப்., நிதியின் முக்கிய அம்சங்கள் பற்றி ஓர் அறிமுகம்:
இ.டி.எப்., என குறிப்பிடப்படும், ‘எக்ஸ்சேன்ஞ் டிரேட் பண்ட்’ நிதி மியூச்சுவல் பண்ட் வகைகளில் ஒன்று. பொதுவாக, இ.டி.எப்., நிதிகள் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி அந்த நிதியை குறிப்பிட்ட குறியீட்டை, (இன்டெக்ஸ்) சேர்ந்த பங்குகளில் முதலீடு செய்கின்றன. இந்த நிதி, அவை முதலீடு செய்யும் குறியீட்டின் செயல்பாட்டை பிரதிபலிக்கும். பல விதமான, இ.டி.எப்., நிதிகள் உள்ளன. இவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டும், பரிவர்த்தனை செய்யப்படும். இவற்றை யூனிட்களாக அப்போதைய சந்தை விலையில் வாங்கி விற்கலாம்.
மத்திய அரசு சார்பில் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன், சி.பி.எஸ்.இ., – இ.டி.எப்., நிதி அறிமுகம் செய்யப்பட்டது. எரிசக்தி துறையை மையமாக கொண்ட, 10 நிறுவன பங்குகளில் முதலீடு செய்த இந்த நிதியின் மூலம் மூன்று கட்டங்களாக, 11 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அண்மையில், இந்த வரிசையில் ‘பாரத் 22’ இ.டி.எப்., நிதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி எரிசக்தி, நிதி, நுகர்வோர் துறை உள்ளிட்ட ஆறு துறைகளைச் சேர்ந்த, 22 நிறுவன பங்குகளில் முதலீடு செய்து அவற்றின் செயல்பாட்டை ரதிபலிக்கும் வகையில் அமையும்.
அரசு நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசு பங்குகளை கொண்ட தனியார் நிறுவனங்கள் என, இவை அமைந்துள்ளன. அரசின் தேவைக்கேற்ப இவை ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படும். பின், பங்குச்சந்தையில் இவை பட்டியலிடப்பட்டு பரிவர்த்தனை செய்யப்படும். மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதி அமைகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட, சி.பி.எஸ்.இ., – இ.டி.எப்., நிதி நல்ல செயல்பாட்டை கொண்டு உள்ள நிலையில், புதிய நிதியும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் என கருதப்படுகிறது.
குறிப்பிட்ட துறை மட்டும் அல்லாமல் பல துறைகளில் பங்குகளில் பரவலாக்கப்பட்டுள்ளன. மேலும், பி.எப்., அமைப்பு, இ.டி.எப்., மூலமான பங்குச்சந்தை முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுஇருப்பதும் சாதகமான அம்சமாக கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|