பதிவு செய்த நாள்
22 ஆக2017
06:20
சார், ஜூலை முதல் வழங்கிய, வழங்கல்களுக்கான, ‘ரிட்டர்ன்’ படிவம் – 3பி தாக்கல் செய்ய வேண்டும் என, கூறியிருந்தீர்கள். தற்போது, அந்த படிவம் தாக்கல் செய்யும் தவணை தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளதா? – முனிராஜ், சேலம்ஆமாம். முன், ‘ரிட்டர்ன்’ படிவம் தாக்கல் செய்வதற்கான தேதி, கடந்த, 20ம் தேதி என்றிருந்தது. அதை, தற்போது, 25 வரை நீட்டிப்பு செய்துள்ளனர்.
நாங்கள், ‘பேக்கரி’ வைத்துள்ளோம்; தற்போது இணக்க வரி திட்டத்தை தேர்வு செய்துள்ளோம். எங்களுடைய கடைக்கு தேவையான, ரொட்டி மற்றும் ரஸ்கு வகைகளை உற்பத்தி செய்கிறோம். இவ்வாறு உற்பத்தி செய்தால், எங்களால் இணக்க வரி திட்டத்தில் தொடர இயலாதா? – தியானேஷ், மதுரைஇணக்க வரி திட்டத்தை தேர்வு செய்த நபர், விற்பனை அல்லது உற்பத்தியில் ஈடுபட முடியும். அவரால், சேவை மட்டுமே வழங்க இயலாது. நீங்கள், உங்களது கடைக்காக, தாராளமாக உற்பத்தியில் ஈடுபடலாம். மேலும், இணக்க வரி திட்டத்திலும் தொடரலாம்.
சார், ஜி.எஸ்.டி., பதிவின் போது, நாங்கள் எங்களுடைய நிறுவனர் விபரத்தை தவறாக பதிவு செய்து விட்டோம். தற்போது, அதை திருத்திக் கொள்ள முடியுமா?– பிமல், கோடம்பாக்கம்நீங்கள், உங்களுடைய, ஜி.எஸ்.டி., கணக்கை, ‘லாகின்’ செய்து, அதில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். தற்போது, திருத்தங்கள் செய்ய வழிவகை செய்துள்ளனர்.
ஐயா, வேறு மாநிலத்தில் செலுத்திய, எஸ்.ஜி.எஸ்.டி., தொகையை, உள்ளீட்டு வரி பயனாக பெற இயலாது என, கூறுகின்றனர். அந்த பரிவர்த்தனையில் செலுத்திய, சி.ஜி.எஸ்.டி.,யை உள்ளீட்டு வரி பயனாக பெற இயலுமா?– ஜெய் கிஷன், மணலி புதுநகர் ஆம். நீங்கள் குறிப்பிட்ட, சி.ஜி.எஸ்.டி., தொகையை, உள்ளீட்டு வரி பயனாக பெறலாம். ஆனால், வெளி மாநிலத்தில் செலுத்திய, எஸ்.ஜி.எஸ்.டி., தொகையை, உள்ளீட்டு வரி பயனாக பெற இயலாது.
ஐயா, நான், இரு மாநிலங்களில் விற்பனை மையம் வைத்துள்ளேன். அதற்கு அம்மாநிலங்களில், ஜி.எஸ்.டி., பதிவையும் பெற்றுவிட்டேன். தற்போது, ஒரு மாநிலத்தின், ஜி.எஸ்.டி., பதிவை ரத்து செய்தால், மற்ற மாநிலங்களில் உள்ள, எங்களது விற்பனை மையத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?– யுவஸ்ரீ, நாகப்பட்டினம்நிச்சயம் எந்த பாதிப்பும் இருக்காது. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள வழங்கல் இடமும், தனித்தனி நபராக கருதப்படும். எனவே, இதனால் எந்த பாதிப்பும் இல்லை.
ஐயா, நாங்கள், குளிர்பான வகையைச் சார்ந்த, சர்பத் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படுமா? இதற்கு, எத்தனை சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும். – ஜனனி, பெருங்களத்துார்அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படும். தங்களுடைய வழங்கலில், 18 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும்.
சார், நாங்கள், விவசாயிகளிடமிருந்து லவங்கம், லவங்கப்பட்டை, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு போன்ற பொருட்களை வாங்கி, அவற்றை பாக்கெட் செய்து, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறோம். மேற்கூறிய பொருட்களுக்கு, எத்தனை சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும்? மேலும், விலைப் பட்டியலில் எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்றும் விளக்கவும்.– ராஜசேகரன் வினோத், தேக்கடிநீங்கள் குறிப்பிட்ட அனைத்து பொருட்களுமே, 5 சதவீதம் வரி விகிதத்தில் வரும். எனவே, நீங்கள், ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., 5 சதவீதம் என, தங்களுடைய வரி விலைப் பட்டியலில், வெளிமாநில வழங்கலின் போது குறிப்பிட வேண்டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|