பதிவு செய்த நாள்
22 ஆக2017
06:22
புதுடில்லி : டில்லியில், அனுடெக் சர்வதேச உணவு தொழில்நுட்ப கண்காட்சி, நேற்று துவங்கியது.
இது குறித்து, இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள, கோல்ன்மெஸ்ஸி ஒய்.ஏ., டிரேட்பேர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளன.
உணவு தயாரிப்பு, பதப்படுத்துதல், பேக்கேஜிங், தர மேலாண்மை, தானியங்கி செயல்முறைகள், வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், சர்வதேச அளவில், தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை, இக்கண்காட்சியில் காணலாம். உள்நாடு மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகள், ‘சார்க்’ உள்ளிட்டவற்றில் இருந்தும், இக்கண்காட்சியை காண வருவர். உணவுத் தொழில் சார்ந்த அனைத்து தகவல்களையும், ஒரே இடத்தில் பெற, இக்கண்காட்சி வாய்ப்பளித்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி குறித்து, கோவையைச் சேர்ந்த, ‘ஸ்பெக்ட்ரா பிளாஸ்ட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், எஸ்.ராம்குமார் கூறுகையில், ‘‘விவசாயிகள், நுகர்வோர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கக் கூடிய, உணவு பதப்படுத்தும் துறையை, முழுமையாக அறிய இக்கண்காட்சி உதவும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|