பதிவு செய்த நாள்
23 ஆக2017
00:33
புதுடில்லி : டில்லியைச் சேர்ந்த, இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’ ஒப்புதல் அளித்து உள்ளது.
நாட்டின், முதல் மின் வணிக சந்தை என்ற சிறப்பை பெற்ற, இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச், 2008ல் துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தில், டாடா பவர், ஆதித்ய பிர்லா குழுமம், மாடிசன் இந்தியா கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள், பங்கு முதலீடு மேற்கொண்டு உள்ளன. புதிய பங்கு வெளியீட்டை, ஆக்சிஸ் கேப்பிட்டல், கோடக் மகிந்திரா கேப்பிட்டல், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் ஆகியவை நிர்வகிக்க உள்ளன. மொத்தம், 60 லட்சம் பங்குகள் விற்பனைக்கு வரும் என, தெரிகிறது. பங்கு விலை, வெளியீட்டு தேதி உள்ளிட்ட விபரங்கள், விரைவில் வெளியாகும்.
இந்தியாவில், 2012ல், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் நிறுவனம், முதன்முதலாக, பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. அதை தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை, பங்கு வெளியீடு மேற்கொண்டது. தேசிய பங்குச் சந்தை, பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, ஏற்கனவே, ‘செபி’யிடம் விண்ணப்பித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|