பதிவு செய்த நாள்
23 ஆக2017
00:35
புதுடில்லி : இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளையும், அவற்றை தயாரிக்கும் வழிமுறைகளையும் ஆவணப்படுத்த, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முடிவு செய்து உள்ளது.
இது குறித்து, ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பவன் அகர்வால் கூறியதாவது: இந்திய கலாசாரத்தில், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவு வகைகளுக்கு, தொன்று தொட்டு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்திய உணவு வகைகள், உலக பிரசித்தி பெற்றவை. அவற்றை மேலும் பிரபலப்படுத்த, ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆரோக்கியமான, சுவைமிக்க பாரம்பரிய உணவுகளையும், அவற்றின் செய்முறைகளையும், ஆவணப்படுத்த உள்ளோம்.
யெஸ் வங்கியைச் சேர்ந்த, யெஸ் குளோபல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துடன் இணைந்து, இப்பணி மேற்கொள்ளப்படும். இதற்காக, ‘புட்காஸ்ட்’ என்ற பிரத்யேக வலைதளம் உருவாக்கப்படும். இதில், முதற்கட்டமாக, நாட்டின் மிகப் பாரம்பரியமான, 200 உணவு வகைகள் மற்றும் அவற்றின் செய்முறைகள் இடம் பெறும். அத்துடன், உணவுகளின் சிறப்பம்சங்கள், யாருக்கு இந்த உணவுகள் உகந்தவை, எப்போது அவற்றை சாப்பிட வேண்டும் என்ற விபரங்களும் இருக்கும்.
இதுதவிர, நாடு முழுவதும், பாரம்பரிய உணவு மையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், முக்கிய நகரங்களில், பாரம்பரிய உணவுகளுக்கு பிரசித்தி பெற்ற வீதிகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு அங்கீகாரம் வழங்கவும் திட்டமிட்டு உள்ளோம். இதன் மூலம், வெளிநாட்டு சுற்றுலா பயணியர், சுவைமிக்க பாரம்பரிய உணவு வகைகள் கிடைக்கும் இடத்தை, சுலபமாக அறிந்து கொள்ள முடியும். இதுதவிர, நாடு முழுவதும், உணவு திருவிழாக்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|