பதிவு செய்த நாள்
25 ஆக2017
07:48
கோல்கட்டா: ‘‘பந்தன் வங்கி, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளது,’’ என, அவ்வங்கியின் தலைமை செயல் அதிகாரி, சந்திரா சேகர் கோஷ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: நுண் கடன் வர்த்தகத்தில், சிறப்பாக செயல்பட்டு வந்ததை அடுத்து, வங்கி சேவையில் ஈடுபட, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்து இருந்தோம். இதற்கு, அனுமதி கிடைத்ததை அடுத்து, இரு ஆண்டுகளுக்கு முன், வங்கி சேவைக்கு மாறினோம். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வங்கியின் நிகர லாபம், 327 கோடி ரூபாயாக உள்ளது. மேலும், இரு ஆண்டுகளில், 23 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் அளவிற்கு, ‘டிபாசிட்’ திரட்டப்பட்டு உள்ளது; 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, கடன் வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது, வங்கிக்கு, நாடு முழுவதும், 840 கிளைகளும்; 383 ஏ.டி.எம்., மையங்களும் உள்ளன. இதையடுத்து, வங்கியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், பங்கு வெளியீட்டில் இறங்க உள்ளோம். மேலும், காப்பீடு மற்றும் மியூச்சுவல் பண்டு வினியோகத்திலும் களமிறங்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|