பதிவு செய்த நாள்
25 ஆக2017
07:51
புதுடில்லி: ஜி.எஸ்.டி.என்., நிறுவன தலைவர், நவின் குமார் கூறியதாவது: ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட விற்பனை விபரங்களை, இதுவரை, 50 லட்சம் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில் பதிவேற்றி உள்ளன. அதில், 20 லட்சம் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்துள்ளன.
கணக்கு தாக்கலுக்கு, 28ம் தேதி கடைசி நாள். அதற்குள், மேலும், 30 லட்சம் பேர், கணக்கு தாக்கல் செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆக., 21 வரை, 10 லட்சம் நிறுவனங்கள் மூலம், 42 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது. கடைசி நாள் நெருங்குவதைஒட்டி, லட்சக்கணக்கான நிறுவனங்கள், ஒரே சமயத்தில், கணக்கு தாக்கல் செய்ததால், கடந்த வாரத்தில், ஒரு மணி நேரம், ஜி.எஸ்.டி.என்., வலைதளம் முடங்கியது.
முந்தைய வரி திட்டத்தில் இருந்து, 72 லட்சம் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,க்கு மாறி உள்ளன. அவற்றில், 50 லட்சம் நிறுவனங்களின் பதிவு பணி முடிவடைந்து உள்ளது. இத்துடன், 15 லட்சம் நிறுவனங்கள், புதிதாக, ஜி.எஸ்.டி.,யில் இணைந்துள்ளன. இதில், 10 லட்சம் நிறுவனங்கள், கணக்கு தாக்கல் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|