‘திட்டங்களுக்கு கடன் வழங்கும் கொள்கையில் மாற்றம் தேவை’‘திட்டங்களுக்கு கடன் வழங்கும் கொள்கையில் மாற்றம் தேவை’ ... ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் ...
இயற்கை விவசாய பொருட்களுக்கு தனி சந்தையை ஏற்படுத்த ‘நிடி ஆயோக்’ வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2017
07:59

புதுடில்லி: ‘‘மர­பணு மாற்ற விதை­கள், ரசா­யன உரங்­கள் ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்­தா­மல், பாரம்­ப­ரிய விதை­கள், இடு பொருட்­கள் ஆகி­ய­வற்­றின் மூலம் விளை­யும், இயற்கை விவ­சா­யப் பொருட்­கள் விற்­ப­னைக்கு, தனி சந்­தையை ஏற்­ப­டுத்த வேண்­டும்,’’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்­பின் தலைமை செயல் அதி­காரி, அமி­தாப் காந்த் வலி­யு­றுத்தி உள்­ளார்.

சர்­வ­தேச பொரு­ளா­தார உற­வு­கள் குறித்து ஆய்வு செய்­யும், தேசிய கவுன்­சில், ‘இந்­தி­யா­வில் இயற்கை விவ­சா­யம்’ என்ற ஆய்­வ­றிக்­கையை தயா­ரித்­துள்­ளது. இதை வெளி­யிட்டு, அமி­தாப் காந்த் பேசி­ய­தா­வது: இந்­தி­யா­வில், சிக்­கிம், நாகா­லாந்து, அரு­ணாச்­சல பிர­தே­சம் ஆகி­யவை, இயற்கை விவ­சா­யத்­திற்கு, அதிக முக்­கி­யத்­து­வம் அளித்து வரு­கின்றன. இதை, மற்ற மாநி­லங்­களும் பின்­பற்ற வேண்­டும். குறிப்­பாக, மழை பொழிவு அதி­க­ம் உள்ள, மத்­திய மற்­றும் மேற்கு பிராந்­தி­யங்­க­ளி­லும், ரசா­யன உரங்­கள் குறை­வாக பயன்­ப­டுத்­தப்­படும், கிழக்கு பகு­தி­க­ளி­லும், இயற்கை வேளாண்மை ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டும்.

இயற்கை விவ­சா­யத்­தில், ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­பு­கள் உள்ளன. இத்­துறை வளர வேண்­டும் என்­றால், அரசை ஒதுக்­கி­விட்டு, தனி­யார் துறை­யி­னர் களத்­தில் இறங்க வேண்­டும். தனி­யார் நிறு­வ­னங்­கள், பாரம்­ப­ரிய விதை­கள், இயற்கை வேளாண் முறை­யில் உரு­வாக்­கப்­பட்ட விதை­கள், ரசா­யன கலப்­பில்­லாத உரங்­கள் ஆகி­ய­வற்­றின் உரு­வாக்­கத்­தி­லும், விற்­ப­னை­யி­லும் ஈடு­பட வேண்­டும். ஒரு­சில விவ­சாய குழுக்­கள், இயற்கை வேளாண் பொருட்­கள் உற்­பத்­தி­யில் ஈடு­ப­டு­கின்றன.

இதில், தனி­யார் நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு அதி­க­ரிக்­கும்­பட்­சத்­தில், சிறந்த தர­மான விளை பொருட்­களை உரு­வாக்க முடி­யும். விளை பொருட்­களின் தரம் சிறப்­பாக இருந்­தால், இயற்கை விவ­சா­யத் துறை சீரிய வளர்ச்சி காணும்.தற்­போது உள்ள சந்தை முறை தான், இயற்கை விளை பொருட்­க­ளுக்கு கடும் சவா­லாக உள்­ளது. இச்­சந்­தை­களில் விற்­கப்­படும் விளை பொருட்­களை, இயற்கை முறை­யில் விளை­விக்­கப்­பட்­டவை எனக்­கூறி, ஏமாற்­று­வது நடக்­கிறது. அத­னால், இயற்கை விளை பொருட்­க­ளுக்கு என, தனி சந்­தை­களை ஏற்­ப­டுத்த வேண்­டும். அது, சிறிய மற்­றும் நடுத்­தர விவ­சா­யி­களின் விளை பொருட்­க­ளுக்கு, உரிய விலை கிடைப்­பதை உறுதி செய்­யும்.

இயற்கை வேளாண் பொருட்­க­ளுக்கு, உணவு பாது­காப்பு மற்­றும் தரங்­கள் ஆணைய விதி­மு­றை­கள் இல்­லா­த­தால், அவற்­றின் விற்­ப­னை­யில் மோசடி நடக்­கிறது. இதை தடுக்க, இயற்கை விளை பொருட்­க­ளுக்கு, ஒரே சீரான தர நிர்­ணய நடை­முறை தேவை. இவ்­வகை பொருட்­க­ளுக்கு என, தனி முத்­திரை, ‘பேக்­கே­ஜிங்’ மற்­றும் மோச­டிக்கு தண்­டனை வழங்­கும் விதி­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும். வேளாண் மற்­றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுப் பொருட்­கள் ஏற்­று­மதி வளர்ச்சி ஆணைய விதி­க­ளின்­படி, தற்­போது, வேளாண் பொருட்­கள் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்றன. இதே விதி­களை, இயற்கை வேளாண் பொருட்­களின் உள்­நாட்டு விற்­ப­னைக்­குக்கு பின்­பற்­ற­லாம். இவ்­வாறு அவர் பேசி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)