பதிவு செய்த நாள்
26 ஆக2017
08:31
புதுடில்லி : ‘‘இன்போசிஸ் நிறுவனத்தில், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, கருத்து வேறுபாடுகளை களைய பாடுபடுவேன்,’’ என, அந்நிறுவனத்தின் செயல்சாரா தலைவராக பொறுப்பேற்றுள்ள, நந்தன் நிலேகனி தெரிவித்து உள்ளார்.
இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி, விஷால் சிக்காவுக்கு அளிக்கப்படும் அபரிமிதமான ஊதியம், பனாயா நிறுவன ஒப்பந்த முறைகேடு உள்ளிட்டவை குறித்து, இன்போசிஸ் நிறுவனர், என்.ஆர்.நாராயணமூர்த்தி கடும் கருத்துக்களை தெரிவித்தார்.
‘இத்தகைய போக்கால், தன்னால் நிறுவன பணிகளை சரிவர கவனிக்க முடியவில்லை’ எனக்கூறி, விஷால் சிக்கா, கடந்த வாரம், திடீரென பதவி விலகினார். இதையடுத்து, இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக, யு.பி.பிரவின் ராவ் நியமிக்கப்பட்டார்.இந்த அதிரடி திருப்பம் காரணமாக, இன்போசிஸ் பங்குகள் விலை, மளமளவென சரிவடைந்தது; பங்கு முதலீட்டாளர்கள், 34 ஆயிரம் கோடி ரூபாய் இழந்தனர்.
இந்நிலையில், இன்போசிஸ்நிறுவனருள் ஒருவரும், ‘ஆதார்’ திட்டத்தை செயல்படுத்தும், தனிநபர் அடையாள ஆணைய முன்னாள் தலைவருமான, நந்தன் நிலேகனி, இன்போசிஸ் நிறுவனத்தின், புதிய செயல்சாரா தலைவராக, நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, அவர், இன்போசிஸ் ஊழியர்களிடம் நேற்று பேசியதாவது: நான், நாராயணமூர்த்தியை பின்பற்றி நடப்பவன். அவருடனும், இன்போசிஸ் மற்றும் இதர நிறுவனர்களுடனும்,எனக்குள்ள நல்லுறவு தொடர்கிறது. இன்போசிஸ் நிறுவனத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவதே, என் முதல் பணி. அதற்கான திட்டம் குறித்து, அக்டோபரில் விரிவாக விளக்குவேன். கருத்து வேறுபாடுக்கு இடம் கொடுக்காமல், நிறுவனம் செயல்பட வேண்டும் என்பதே, என் விருப்பம். தகுதியான புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்யும் வரை, நிறுவனத்தை வழிநடத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|