பதிவு செய்த நாள்
26 ஆக2017
08:33
மும்பை : டாடா குழுமத்தின் கவுரவ தலைவர் ரத்தன் டாடா, சில தினங்களுக்கு முன், கோவை வந்து, மின்சாரத்தில் ஓடும், ‘நானோ’ கார் சோதனையை பார்வையிட்டு உள்ளார்.
மிகவும் ரகசியமாக நடைபெற்ற, இந்த கார் சோதனை வெற்றிகரமாக நடைபெற்று உள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதன் மூலம், டாடா மோட்டார்ஸ், ‘நானோ’ கார் தயாரிப்பை கைவிட உள்ளதாக, வெளியான தகவல்கள் உண்மையல்ல என்பது தெரிய வந்துள்ளது.
விரைவில், ‘நானோ’ மின் கார் குறித்த அறிவிப்பை, டாடா மோட்டார்ஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், மகிந்திரா குழுமம், மின் கார் தயாரிப்பில் ஈடுபடுகிறது. இந்நிறுவனத்திற்கு போட்டியாக, ‘நானோ’ மின் கார் களமிறங்கும் என, தெரிகிறது.
சமீபத்தில், டாடா பவர் நிறுவனம், மின் கார்களை, ‘சார்ஜ்’ செய்யும் நிலையத்தை, மும்பையில் திறந்தது குறிப்பிடத்தக்கது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமான, ‘நானோ’ மலிவு விலை கார், பல்வேறு எதிர்ப்புகளை சமாளித்து, 2009ல் வெளியானது. எனினும், இந்த காருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால், இதன் ஏற்றுமதியில், டாடா மோட்டார்ஸ் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|