பதிவு செய்த நாள்
26 ஆக2017
08:34
புதுடில்லி : ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ‘ஆர்ஜியோ’ நிறுவனம், 1,500 ரூபாய்க்கு, ‘4ஜி’ – பியூச்சர் போனை, அடுத்த வாரம் வெளியிட உள்ளது.
இதற்கான முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமானோர், ஆர்ஜியோ வலைதளத்தை மொய்த்தனர்; 500 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்தனர். ஒரே சமயத்தில், லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால், ஓரிரு முறை வலைதளம் முடங்கியது. சில மணி நேரத்தில், சகஜ நிலைக்கு திரும்பியது. மூன்று ஆண்டுகளுக்கு பின், பியூச்சர் போனை திரும்ப ஒப்படைத்து, 1,500 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என, ஆர்ஜியோ அறிவித்துள்ளதே, இத்தகைய வரவேற்புக்கு காரணம் என, கூறப்படுகிறது.
இந்த பியூச்சர் போனில், இரண்டு கேமராக்கள், 512 எம்.பி., ராம், 4 ஜி.பி., நினைவகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மாதம், 153 ரூபாய் கட்டணத்தில், இலவச அழைப்பு, வலைதள வசதி, தகவல், படங்கள் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை, இதில் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வாரம், 40 – 50 லட்சம் பியூச்சர் போன்களை வினியோகிக்க, ஆர்ஜியோ திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|