ஜி.எஸ்.டி., சில விளக்­கங்­கள்; தெளி­வு­கள்ஜி.எஸ்.டி., சில விளக்­கங்­கள்; தெளி­வு­கள் ... ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம் ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வரித் தாக்கலை உறுதி செய்யும் வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2017
07:24

வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்­ப­வர்­களின் எண்­ணிக்கை உயர்ந்­தி­ருப்­ப­தாக வரு­மான வரித்­துறை தெரி­வித்­துள்­ளது. முந்­தைய ஆண்­டுடன் ஒப்­பிடும் போது, 2015 ஆகஸ்ட் வரை, கணக்கு தாக்கல் செய்­த­வர்­களின் எண்­ணிக்கை, 25 சத­வீதம் உயர்ந்­துள்­ளது.
வரு­மான கணக்கு தாக்கல் செய்தால் மட்டும் போதாது, அதை உறுதி செய்து கொள்­வதும் அவ­சியம். அதா­வது வரித்­தாக்­கலை சரி­பார்க்க வேண்டும். குறிப்­பாக, முதல் முறை­யாக வரு­மான வரிக்­க­ணக்கு தாக்கல் செய்­ப­வர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.வரு­மான வரிச்­சட்­டப்­படி, வரித்­தாக்கல் செய்­த­வுடன் அதை சரி­பார்க்க வேண்டும். அப்­போது தான், அந்த செயல்­முறை முழுமை அடையும். வரு­மான வரிக்­க­ணக்கு தாக்கல் செய்­ததை நேர­டி­யாக அல்­லது ‘ஆன் – லைன்’ மூலம் உறுதி செய்­யலாம்.
நேரடி வழி:
வரித்­தாக்கல் ஒப்­புதல் படி­வத்தை (அக்­னா­லட்ஜ்மன்ட்) தர­வி­றக்கம் செய்து கையெ­ழுத்­திட்டு அனுப்பி வைப்­பதன் மூலம் இதை செய்­யலாம். ஐ.டி.ஆர்.வி., படி­வத்தை வரு­மான வரித்­துறையில், ‘இ – பைலிங்’ பக்­கத்தில் இருந்து தர­வி­றக்கம் செய்­யலாம். இதில் உங்கள் கணக்கு பகு­தியில், தேவை­யான தக­வல்கள் இடம்­பெற்­றி­ருக்கும். இன்­னமும் தாக்கல் உறுதி செய்­யப்­ப­டாத ஆண்­டுக்­கான படி­வத்தை தர­வி­றக்கம் செய்து அச்­சிட்டு, அதில் கையெ­ழுத்­திட்டு அஞ்சல் மூலம் வரு­மான வரித்­துறை மத்­திய செயல்­முறை மையத்­திற்கு (சி.பி.சி.,) 120 நாட்­க­ளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இந்த படிவம் கிடைக்கப் பெற்­ற­வுடன் அந்த தகவல் இ – மெயில் மூலம் அனுப்பி வைக்­கப்­படும். இந்த தக­வலை இணை­ய­தளம் மூலம் உறுதி செய்து கொள்­ளலாம்.
‘ஆன் – லைன்’ வழி:
இதே போல இணையம் மூலமும் வரித்­தாக்­கலை உறுதி செய்­யலாம். இணைய வங்­கிச்­சேவை, வங்­கிச்­சேவை, ஆதார் எண், டிமெட் கணக்கு மூலம் என, பல­வி­தங்­களில் இதை மேற்­கொள்­ளலாம். இணைய வங்­கிச்­சேவை மூலம் எனில், இணைய வங்கி கணக்கு மூலம் இ – பைலிங் பக்­கத்தில் நுழைய வேண்டும். அதன் பின், என் கணக்கு பகு­தியில், ‘இ – வெரிபை’ ரிட்டர்ன் வாய்ப்பை ‘கிளிக்’ செய்து தகவல் சமர்­ப்பிக்­கலாம். இணைய வங்­கிச்­சேவை மூலம் அணுக முதலில் இ.வி.சி., குறி­யீடு பெற வேண்டும். ஆதார் எண்ணை பயன்­படுத்­தினால் ஒருமுறை பாஸ்­வேர்டு அனுப்பி வைக்­கப்­படும். இணையம் மூலம் வெரிபை செய்யும் போது உட­ன­டி­யாக ஒப்­புதல் தகவல் பெறலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)