பதிவு செய்த நாள்
28 ஆக2017
07:24
வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2015 ஆகஸ்ட் வரை, கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை, 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
வருமான கணக்கு தாக்கல் செய்தால் மட்டும் போதாது, அதை உறுதி செய்து கொள்வதும் அவசியம். அதாவது வரித்தாக்கலை சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, முதல் முறையாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.வருமான வரிச்சட்டப்படி, வரித்தாக்கல் செய்தவுடன் அதை சரிபார்க்க வேண்டும். அப்போது தான், அந்த செயல்முறை முழுமை அடையும். வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ததை நேரடியாக அல்லது ‘ஆன் – லைன்’ மூலம் உறுதி செய்யலாம்.
நேரடி வழி:
வரித்தாக்கல் ஒப்புதல் படிவத்தை (அக்னாலட்ஜ்மன்ட்) தரவிறக்கம் செய்து கையெழுத்திட்டு அனுப்பி வைப்பதன் மூலம் இதை செய்யலாம். ஐ.டி.ஆர்.வி., படிவத்தை வருமான வரித்துறையில், ‘இ – பைலிங்’ பக்கத்தில் இருந்து தரவிறக்கம் செய்யலாம். இதில் உங்கள் கணக்கு பகுதியில், தேவையான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இன்னமும் தாக்கல் உறுதி செய்யப்படாத ஆண்டுக்கான படிவத்தை தரவிறக்கம் செய்து அச்சிட்டு, அதில் கையெழுத்திட்டு அஞ்சல் மூலம் வருமான வரித்துறை மத்திய செயல்முறை மையத்திற்கு (சி.பி.சி.,) 120 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இந்த படிவம் கிடைக்கப் பெற்றவுடன் அந்த தகவல் இ – மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை இணையதளம் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
‘ஆன் – லைன்’ வழி:
இதே போல இணையம் மூலமும் வரித்தாக்கலை உறுதி செய்யலாம். இணைய வங்கிச்சேவை, வங்கிச்சேவை, ஆதார் எண், டிமெட் கணக்கு மூலம் என, பலவிதங்களில் இதை மேற்கொள்ளலாம். இணைய வங்கிச்சேவை மூலம் எனில், இணைய வங்கி கணக்கு மூலம் இ – பைலிங் பக்கத்தில் நுழைய வேண்டும். அதன் பின், என் கணக்கு பகுதியில், ‘இ – வெரிபை’ ரிட்டர்ன் வாய்ப்பை ‘கிளிக்’ செய்து தகவல் சமர்ப்பிக்கலாம். இணைய வங்கிச்சேவை மூலம் அணுக முதலில் இ.வி.சி., குறியீடு பெற வேண்டும். ஆதார் எண்ணை பயன்படுத்தினால் ஒருமுறை பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப்படும். இணையம் மூலம் வெரிபை செய்யும் போது உடனடியாக ஒப்புதல் தகவல் பெறலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|