பதிவு செய்த நாள்
28 ஆக2017
07:25
நிதி விஷயத்தில் பொய்யான தகவல்களை நம்பக்கூடாது என்பதோடு, பொய்கள் சொல்லிக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிதி வல்லுனர்கள். சாமானியர்கள் மத்தியில் சேமிப்பு, முதலீடு உள்ள தவறான அபிப்ராயங்களையே நிதி பொய்கள் என்று குறிப்பிடுகின்றனர். இந்த தவறான கருத்துக்களை தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்வதன் மூலம் சேமிப்பதையும், முதலீட்டையும், நிதி முன்னேற்றத்தையும் தள்ளிப்போட நேரலாம். இதை தவிர்க்க நிதி பொய்களை தவிருங்கள்:
இப்போதே ஓய்வு கால சேமிப்பு எதற்கு?
இளம் வயதினர் பலரும், ஓய்வு காலத்திற்கு இன்னும் பல ஆண்டுகள் இருப்பதால், இப்போதே அதற்காக சேமிக்க வேண்டிய அவசியமில்லை என கருதுகின்றனர். ஆனால், இதைவிட தவறான கருத்து இருக்க முடியாது. ஏனெனில், பணியில் சேர்ந்த ஆரம்ப காலத்திலேயே சேமிப்பதன் மூலம் கூட்டு வட்டியின் பலனை முழுமையாக பெறலாம்.lஓய்வு கால நிதி தேவை என உணரும் போது, அதை சேமிப்பதற்கான போதிய காலம் இல்லாமல் போகலாம்!
என்னால் சேமிக்க முடியாது!
என் ஊதியம் குறைவு; செலவுகள் அதிகம். எனவே சேமிக்க வழியில்லை என, பலரும் கூறுவதை கேட்கலாம். ஆனால், குறைவான சம்பளம் வாங்குபவர்களும் மட்டும் அல்ல, அதிகமாக சம்பளம் வாங்குபவர்களும் இப்படி தான் கூறுகின்றனர் என்பதை கொண்டே, இதன் தன்மையை புரிந்து கொள்ளலாம். சேமிப்பை தள்ளிப்போட இது ஒரு காரணம் அவ்வளவு தான்.lசெலவுகள் இருக்கவே செய்யும். சேமிப்பு உங்கள் முதல் செலவாக இருக்கட்டும்!
கடன் அதிகம் இருக்கிறது
வீட்டுக்கடன், வாகனக் கடன் என, பல வகை கடன் இருப்பதை சுட்டிக்காட்டி இன்னும் பலர், கடன் தவணைக்கே ஊதியத்தின் கணிசமான தொகை செலவாகிவிடும் போது, சேர்ப்பது எப்படி சாத்தியம் என கேட்கலாம். ஆனால், கடன் தேவைக்காக வாங்கியது. சேமிப்பும், முதலீடும் எதிர்காலத்திற்கானது. *கடனை அடைத்துக் கொண்டே முதலீட்டிற்கான வழியை நாடுவதே சரியாக இருக்கும்.
முதலீடு விஷயங்கள் புரிவதில்லை
பங்குச்சந்தை ஏற்ற இறக்கமும், நிதி சாதனங்களின் சிக்கலான தன்மையும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால், முதலீடு விஷயங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்பது சேமிக்காமல் இருப்பதற்கான காரணம் ஆகாது. நிதி விஷயங்களின் அடிப்படை எளிதானவை. *சந்தையை புரிந்து கொள்ள முயற்சிக்காமல், தேவைக்கேற்ப எளிய முதலீட்டு வழிகளை நாடுங்கள்.
வயதாகிவிட்டது, இனி என்ன செய்ய?முதல் கேள்வியின் தொடர்ச்சி தான் இது. ஆரம்ப காலத்தில் முதலீடு செய்யாமல் விட்டுவிட்டால், நிதி பாதுகாப்பின் தேவையை உணரும் காலத்தில் அதிக வயதாகி போதிய அவகாசம் இல்லாமல் இருப்பதை உணர்ந்து வருந்தலாம். ஆனால், இப்போதாவது துவங்குவது நல்லது.*வாழ்நாள் ஆயுள் அதிகம் இருக்குமாயின், சேமிப்பதற்கான காலமும் அதிகம் இருக்கும், கவலை வேண்டாம்!
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|