பதிவு செய்த நாள்
28 ஆக2017
10:17
மும்பை : நந்தன் நீலேகனி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு திரும்பி உள்ளதால், இன்போசிஸ் நிறுவன பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் உயர்வு பாதைக்கு திரம்பி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஆக.,28, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 154.47 புள்ளிகள் உயர்ந்து 31,750.53 புள்ளிகளாகவும், நிப்டி 40.15 புள்ளிகள் உயர்ந்து 9897.20 புள்ளிகளாகவும் உள்ளன.
கோடாக் மகேந்திரா வங்கி, எயிசர் மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அதே சமயம், ஹீரோ மோட்டோ கார்ப், ஆசியன் பெயின்ட்ஸ், ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|