பதிவு செய்த நாள்
29 ஆக2017
23:59
புதுடில்லி : நிதியாண்டை, ஜன., – டிச., என, மாற்றும் முடிவை, மத்திய அரசு கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல நாடுகளில், நிதியாண்டு, ஜன., – டிச., ஆக உள்ளது. இந்தியா, ஏப்., – மார்ச் வரையிலான காலத்தை, நிதியாண்டாக கடைப்பிடித்து வருகிறது. இது, சர்வதேச நடைமுறைக்கு மாறாக உள்ளதாலும், வேளாண் துறையின் வெவ்வேறு பருவ உற்பத்தி அடிப்படையில், துல்லியமாக பட்ஜெட் தயாரிக்க முடியாததாலும், நிதியாண்டை மாற்ற வேண்டும் என, பார்லி., குழு, ‘நிடி ஆயோக்’ ஆகியவை வலியுறுத்தின.
இதையடுத்து, ஜூலை, 21ல், பார்லி.,யில் பேசிய, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நிதியாண்டை மாற்றுவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், எவ்வித மாற்றமும் செய்வதில்லை என, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அமல் என, இரண்டு மிகப்பெரிய சீர்திருத்தங்களை செய்துள்ளது. இதன் தாக்கத்தில் இருந்து, நாடு இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இந்நிலையில், நிதியாண்டை மாற்றினால், அக்., இறுதி அல்லது நவ., துவக்கத்தில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.
இது, மேலும் பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுத்து விடும் என, மத்திய அரசு கருதுகிறது. அதனால், நிதியாண்டை மாற்றும் திட்டத்தை கைவிட்டுள்ளது.அதே சமயம், மத்திய பட்ஜெட்டை, இரு வாரங்களுக்கு முன்னதாகவே தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாகவே..அடுத்த ஆண்டு, ஜன., மத்தியிலேயே, 2018 – 19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|