பதிவு செய்த நாள்
30 ஆக2017
10:42
மும்பை : ஜப்பான் - வடகொரியா இடையேயான போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்று(ஆகஸ்ட் 30-ம் தேதி) வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் ஆரம்பமாகின.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 193.39 புள்ளிகள் உயர்ந்து 31,581.78-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 75.20 புள்ளிகள் உயர்ந்து 9,871.25-ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 200 புள்ளிகளும், நிப்டி 78 புள்ளிகளும் உயர்வுடன் வர்த்தகமாகின.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், சில குறிப்பிட்ட பங்குகள் உயர்வுடன் காணப்படுவது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|