பதிவு செய்த நாள்
01 செப்2017
00:08
மும்பை : ‘குடிநீர், குளிர்பானம் உள்ளிட்ட திரவப் பொருட்களை அடைக்க பயன்படும், ‘பெட்’ பாட்டில் மறுசுழற்சி சந்தை மதிப்பு, 3,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த, தேசிய ரசாயன ஆய்வகம், பி.ஏ.சி.இ., அமைப்பிற்காக, ‘பெட்’ பாட்டில் குறித்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. இதை, பி.ஏ.சி.இ., பொதுச் செயலர், பி.சி.ஜோஷி வெளியிட்டு பேசியதாவது: இந்தியாவில், ‘பெட்’ பாட்டில் பயன்பாடு, அவற்றின் மறுசுழற்சி குறித்த ஆய்வுப் பணிகள், 2016ல் துவங்கின. இப்பணிகள் முடிவடைந்து, தற்போது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆய்வில், இந்தியாவில், ஆண்டுக்கு, 900 கிலோ டன், ‘பெட்’ பாட்டில்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. இதில், 70 சதவீத, ‘பெட்’ பாட்டில் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
அவற்றில், அமைப்பு சார்ந்த துறையின் கீழ், பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில், 65 சதவீத, ‘பெட்’ பாட்டில்களின் மறுசுழற்சி பணிகள் நடக்கின்றன. அமைப்பு சாராத முறையில், 15 சதவீத, ‘பெட்’ பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. வீடுகளில், 10 சதவீதம் பழைய, ‘பெட்’ பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
‘பேக்கேஜிங்’ துறையில், அதிகம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில், ‘பெட்’ பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த எடையில், வலிமையான கட்டமைப்புடன், உணவை பாதுகாக்க, ‘பெட்’ பாட்டில் உதவுகிறது. உள்ளிருக்கும் பொருளை வெளிப்படுத்தும் தன்மையுடன், கரியமில வாயுவை கட்டுக்குள் வைக்கும் திறனுடன் உள்ளதால், உலகெங்கும், ‘பேக்கேஜிங்’ உணவுத் துறையினரின் விருப்பமான தேர்வாக, ‘பெட்’ பாட்டில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|