பதிவு செய்த நாள்
01 செப்2017
00:09
புதுடில்லி : மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், நாடு முழுவதும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி, கடனுதவி வழங்க உள்ளது.
இது குறித்து, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நாடு முழுவதும், கைத்தறி மற்றும் கைவினை மைய பகுதிகளில், நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு, கடனுதவி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்டவற்றை வழங்கும் முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள், அக்., 7 – 17 வரை நடைபெறும். இதில், நெசவாளர்கள் மற்றும் கைவினைக்கலைஞர்கள், ‘முத்ரா’ திட்டத்தின் கீழ் கடன் பெற உதவி செய்யப்படும்; தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.
மேலும், கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பிற்கு தேவையான நவீன கருவிகள், உபகரணங்கள், ‘நுாலிழை கணக்கு புத்தகம்’ உள்ளிட்டவையும், இந்த முகாம்களில் வழங்கப்பட உள்ளன. மாநில அரசுகளுடன் இணைந்து, 200க்கும் மேற்பட்ட கைத்தறி, கைவினை தொழில் மற்றும் நெசவாளர் சேவை மையங்கள் உள்ள பகுதிகளில், இந்த முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|