பதிவு செய்த நாள்
01 செப்2017
00:11
புதுடில்லி : சரக்கு போக்குவரத்திற்கான, ‘இ – வே பில்’ குறித்த அறிவிக்கையை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில், ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைப்படி, சமையல் எரிவாயு, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட, 153 அத்தியாவசிய பொருட்களுக்கு, ‘இ – வே பில்’ விதிமுறைகளில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
ஜூலை, 1ல் அறிமுகமான, ஜி.எஸ்.டி., முறையில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பிலான சரக்கு போக்குவரத்திற்கு, ‘இ – வே பில்’ கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொருட்களின் தயாரிப்பு, வினியோகம், விற்பனை உள்ளிட்ட விபரங்களை, கணினியில் பதிவேற்றி, ‘இ – வே பில்’லை தயாரிக்கலாம். இதை, சரக்கு போக்குவரத்தின் போது, சோதனை செய்யும் வரி அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.
வரி ஏய்ப்பை தடுக்கும், இந்த திட்டத்திற்கான சாப்ட்வேர் உருவாக்கும் பணியில், தேசிய தகவல் ஆவண மையம் ஈடுபட்டுள்ளது. அடுத்த மாதம், இப்பணிகள் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மத்திய அரசு அறிவிக்கும் நாள் முதல், ‘இ – வே பில்’ நடைமுறை அமலுக்கு வரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|