பதிவு செய்த நாள்
01 செப்2017
16:14
மும்பை : பொருளாதார வளர்ச்சி சரிவடைந்ததன் காரணமாக ஆட்டோ, பார்மா, மின் துறை பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டன. இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 161.74 புள்ளிகள் உயர்ந்து 31,892.23 புள்ளிகளாகவும், நிப்டி 56.50 புள்ளிகள் உயர்ந்து 9974.40 புள்ளிகளாகவும் உள்ளன. இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 296.17 புள்ளிகளும், நிப்டி 117.35 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.
அசோக் லேலாண்ட், மாருதி, சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார்ஸ், எய்சர் மோட்டா, எம் அண்ட் எம் உள்ளிட்ட ஆட்டோ துறை நிறுவன பங்குகள் 5.42 சதவீதம் உயர்ந்துள்ளன. இதனால் ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாத வர்த்தகம் வளர்ச்சி பாதையில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|