பதிவு செய்த நாள்
02 செப்2017
00:20
புதுடில்லி : மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், 5.7 சதவீதமாக சரிவடைந்துள்ளது குறித்து, 'நிடி ஆயோக்' அமைப்பின் துணை தலைவராக நேற்று பொறுப்பேற்ற ராஜீவ் குமார் கூறியதாவது: ஜூலையில் ஜி.எஸ்.டி., அறிமுகமாவதை முன்னிட்டு, பல நிறுவனங்கள், தயாரிப்பை குறைத்து, கையிருப்பு சரக்கை பைசல் செய்ய ஆர்வம் காட்டின. இதனால், மதிப்பீட்டு காலாண்டில், தயாரிப்பு குறைந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது.
தற்போது, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து விட்டதால், புதிய வரி விதிப்பு முறையில் தெளிவு பிறந்து உள்ளது. தயாரிப்பு துறையும் சூடு பிடித்துள்ளது. பருவ மழையும் நன்கு உள்ளது. பல நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளில் இறங்கி வருகின்றன. அன்னிய நேரடி முதலீடுகளும், அன்னிய நிதி நிறுவன முதலீடுகளும் அதிகரித்துள்ளன. அதனால், நடப்பு 2017 – 18ம் நிதியாண்டின், ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 – 7.5 சதவீதமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|