பதிவு செய்த நாள்
02 செப்2017
00:21
புதுடில்லி : கடந்த ஜூலையில் சரிவைக் கண்ட தயாரிப்பு துறை, ஆகஸ்ட்டில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளதாக, நிக்கி – மார்க்கிட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஜூலையில், தயாரிப்பு துறையின் வளர்ச்சியை குறிக்கும் 'நிக்கி – பி.எம்.ஐ.,' குறியீடு, 50 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி கண்டு, 47.9 புள்ளியாக இருந்தது. இது, ஆகஸ்டில், 51.2 புள்ளியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, நிக்கி – மார்கிட்வெளியிட்டுள்ள அறிக்கை: ஜூலையில் அறிமுகமான ஜி.எஸ்.டி., குறித்து போதிய புரிதல் இல்லாததால், நிறுவனங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என, திட்டங்களை தள்ளி வைத்தன. அதனால், புதிய, ‘ஆர்டர்’கள் குறைந்தன. மூலப் பொருட்களில் முதலீடு செய்வது சரிந்தது. இதனால், தயாரிப்பு குறைந்து, ஒட்டுமொத்த துறையின் வளர்ச்சி பின்னடைவைகண்டது. இந்த நிலை ஆகஸ்டில் மாறியது. ஜி.எஸ்.டி., புதிய வரி விகிதங்கள், நடைமுறைகளில், தயாரிப்பு நிறுவனங்கள், சப்ளையர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக, ‘ஆர்டர்’கள் கிடைத்தன. அவற்றை செய்து முடிக்க, கூடுதலான தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இத்தகைய நிலை, 2013 மார்ச் மாதத்திற்கு பின், கடந்த மாதம் தான் ஏற்பட்டது. ஜி.எஸ்.டி., காரணமாக, சிலபொருட்கள் விலை அதிகரித்த போதிலும், பலவற்றின் விலை குறைந்துள்ளதால், தயாரிப்பு நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம் குறைந்துள்ளது. இதுவும், பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க துணை புரிந்து உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், பொறியியல் சாதனங்கள், இடைநிலை பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|