தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ... மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...
ஜியோபோன்: இந்தியாவில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2017
16:13

புதுடில்லி : இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபோன் முன்பதிவு ஆகஸ்டு 24-ம் தேதி துவங்கியது. எனினும், பல லட்சம் பேர் முன்பதிவு செய்ததால் முன்பதிவு நிறுத்தப்பட்டது. ஜியோபோன் முன்பதிவு பலத்த வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து எத்தனை பேர் ஜியோபோன் வாங்க முன்பதிவு செய்தனர் என்ற தகவலை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி ஜியோபோன் வாங்க முதற்கட்ட முன்பதிவில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என அறிவித்துள்ளது. ஒரே நாளில் இத்தனை பேர் முன்பதிவு செய்திருப்பது ஜியோவின் எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டதாக தெரிவித்துள்ளது. முன்னதாக வாரத்திற்கு 50 லட்சம் ஜியோபோன்களை விநியோகம் செய்ய ஜியோ திட்டமிட்டிருந்தது.
ஏற்கனவே ஜியோபோன் முன்பதிவு அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. ஜியோபோன் வாங்க 60 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ள நிலையில், இது தவிர ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டாம் கட்ட முன்பதிவு குறித்து அறிந்து கொள்ள ஜியோதளத்தில் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆண்டில் 10 கோடி ஜியோபோன்களையும், இரண்டாவது ஆண்டில் 10 கோடி ஜியோபோன்களை விற்பனை செய்ய ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 20 கோடி ஜியோபோன் வாடிக்கையாளர்கள் மூலம் ஜியோ சேவையில் இதுவரை இணையாதவர்களையும் சேர்க்க ஜியோ திட்டமிட்டுள்ளது. ஜூலை 21-2017 வரை ரிலையன்ஸ் ஜியோ சேவைகளை 12.5 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.
முதற்கட்ட ஜியோபோன் முன்பதிவு செய்திருப்போருக்கு சாதனங்கள் செப்டம்பர் 21-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும், இதே தேதியில் இரண்டாம் கட்ட முன்பதிவுகள் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ஜியோபோன் விநியோக தேதி குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)