பதிவு செய்த நாள்
02 செப்2017
16:13
புதுடில்லி : இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபோன் முன்பதிவு ஆகஸ்டு 24-ம் தேதி துவங்கியது. எனினும், பல லட்சம் பேர் முன்பதிவு செய்ததால் முன்பதிவு நிறுத்தப்பட்டது. ஜியோபோன் முன்பதிவு பலத்த வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து எத்தனை பேர் ஜியோபோன் வாங்க முன்பதிவு செய்தனர் என்ற தகவலை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி ஜியோபோன் வாங்க முதற்கட்ட முன்பதிவில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என அறிவித்துள்ளது. ஒரே நாளில் இத்தனை பேர் முன்பதிவு செய்திருப்பது ஜியோவின் எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டதாக தெரிவித்துள்ளது. முன்னதாக வாரத்திற்கு 50 லட்சம் ஜியோபோன்களை விநியோகம் செய்ய ஜியோ திட்டமிட்டிருந்தது.
ஏற்கனவே ஜியோபோன் முன்பதிவு அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. ஜியோபோன் வாங்க 60 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ள நிலையில், இது தவிர ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டாம் கட்ட முன்பதிவு குறித்து அறிந்து கொள்ள ஜியோதளத்தில் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆண்டில் 10 கோடி ஜியோபோன்களையும், இரண்டாவது ஆண்டில் 10 கோடி ஜியோபோன்களை விற்பனை செய்ய ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 20 கோடி ஜியோபோன் வாடிக்கையாளர்கள் மூலம் ஜியோ சேவையில் இதுவரை இணையாதவர்களையும் சேர்க்க ஜியோ திட்டமிட்டுள்ளது. ஜூலை 21-2017 வரை ரிலையன்ஸ் ஜியோ சேவைகளை 12.5 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.
முதற்கட்ட ஜியோபோன் முன்பதிவு செய்திருப்போருக்கு சாதனங்கள் செப்டம்பர் 21-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும், இதே தேதியில் இரண்டாம் கட்ட முன்பதிவுகள் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ஜியோபோன் விநியோக தேதி குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|